நாட்டையே உலுக்கிய பம்பாய் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பணியாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் போராடி பெற்று தந்த பத்ம ஸ்ரீ உஜ்வால் நிகாம், ஈடிவி பாரத்தின் தேசிய பணியக தலைவர் ராகேஷ் திரிபாதிக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "நீதித்துறை அமைப்பில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி குற்றமிழைத்தோர் தப்பிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தயாராக வேண்டும். முதலில் அதற்கு சுய ஆய்வு தேவை.
![குற்றவியல் நீதி அமைப்பில் நிலவும் குறைகளை சரிசெய்ய வேண்டும் - மூத்த வழக்குரைஞர் உஜ்வால் நிகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08:34:49:1594825489_8035835_633_8035835_1594810954532.png)
அண்மையில் கான்பூர் காவல் துறையினர், உத்தரப் பிரதேச நிழல் உலக தாதா குற்றவாளி விகாஸ் துபே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற தவறான முன்னுதாரணங்கள் மக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீரழித்துவிடும். இந்த அமைப்பை கேள்வி கேட்கத் தூண்டும்.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருக்கும்போது, செயல்படுத்தும் மட்டத்தில் எந்தவிதமான தளர்வுகளும் இருக்கக்கூடாது. எத்தகைய குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின்படி, சகிப்புத்தன்மையோடு பாரபட்சமில்லாமல் அணுக வேண்டும்.
அதேபோல, சட்டத்தின் செயல்முறை மெதுவாக இருக்கக்கூடாது. அதேபோல், தேவையான குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் கருத்து" என தெரிவித்தார்