ETV Bharat / bharat

ஈரான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

author img

By

Published : Jan 10, 2020, 10:22 PM IST

சுலைமானி படுகொலைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஒரு பெரும் குழப்பம் உள்ளது. ஏனெனில், ஈரானை பிராந்திய நண்பராக இந்தியா கருதுகிறது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மக்ரான் கடற்கரையில் அமைந்துள்ள சபாஹரின் வளர்ச்சிக்கு கணிசமான நிதியை முதலீடு செய்ய இந்தியா முயல்கிறது.

Gen Qassem's assassination
Gen Qassem's assassination

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அதிகாலையில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில், 62 வயதான ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்தது ஈரானை கோபமடையச் செய்தாலும், அதில் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை.

சுலைமானி, தாம் கொல்லப்படலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையின் (ஐ.ஆர்.ஜி.சி) வெளிப்புறக் குழுவான அல்-குட்ஸ் படையின் தளபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன. அவர், தன்னை எதிர்த்து போராடுபவர்களிடம் இருந்தே எதிர்ப்பு சக்தியை அனுபவிப்பதாகத் தோன்றியது.

'ஆபரேஷன் பாலைவனப் புயல்' என்ற நடவடிக்கைக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவால் அவர் ஏன் தாக்கப்படவில்லை என்பதற்கு சில காரணங்கள் இருந்தன. சுலைமானியின் படுகொலைக்கான உண்மையான காரணத்தை அறிய இன்னும் சில காலம் ஆகும். அதே நேரத்தில், அவரது மரணம் பல நாடுகளுடன் ஈரான் உருவாக்கிய நிதி உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

Gen Qassem's assassination
ஈரான் விவகாரம்

இந்தப் படுகொலைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஒரு பெரும் குழப்பம் உள்ளது. ஏனெனில், ஈரானை பிராந்திய நண்பராக இந்தியா கருதுகிறது. அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மக்ரான் கடற்கரையில் அமைந்துள்ள சபாஹரின் வளர்ச்சிக்கு கணிசமான நிதியை முதலீடு செய்ய இந்தியா முயல்கிறது.

ஈரானையோ, அமெரிக்காவையோ பகைத்துக் கொள்ள விரும்பாதா இந்தியா, கத்தி மேல் நடப்பது போல் ஈரானிய படைத்தளபதியின் மரணத்திற்கு வாய் திறக்காமல் கண்டனம் தெரிவிக்காமல், மாறாக இந்தியாவின் ஆர்வம் அவர் படுகொலைச் செய்யப்பட்டதன் காரணத்தை அறிந்து கொள்வதில்தான் இருந்தது.

இது அமெரிக்காவை மகிழ்ச்சியடையச் செய்யலாம்; ஆனால் இது தெஹ்ரானுக்கு ஆதரவானதாக இருக்காது. இது சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் நிர்வாக குத்தகைக்கு வழங்கும் வாய்ப்பைக் குறைத்துள்ளது.

Gen Qassem's assassination
ட்ரம்ப்

பாகிஸ்தானின் பலுச்சி துறைமுகமான குவாடரில் அதிக முதலீடு செய்துள்ள சீனா, சபாஹரிலும் துறைமுகம் கட்டுவதில் ஆர்வமாக இருந்தது; ஆனால் இப்பணியை இந்தியாவுக்குக் கொடுக்க ஈரானுக்குச் சில காரணங்கள் இருந்தன. ஓமன் கடலில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகம்தான் இந்தியாவின் முதல் வெளிநாட்டு முதலீடாகும். இது பாகிஸ்தானை ஓரங்கட்ட உதவுகிறது; மத்திய ஆசியாவுடன் தனது நில வழியை மீண்டும் உருவாக்க இந்தியாவுக்கு உதவுகிறது.

அல்-பெரூனியின் பயணக் கட்டுரைகளில் சபாஹர் துறைமுகம்தான் இந்துஸ்தானின் தொடக்கப் புள்ளியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் துறைமுக நகரத்தில் இந்தியாவின் முதலீடு என்பது இயற்கையான ஒன்றாகவே கருதப்படுகிறது. சபாஹருக்குப் பயணம் செய்தபோது, அந்த எழுத்தாளர் இந்துஸ்தானி மொழியை எளிதில் பேசுவதையும், இந்தியா பயணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும் கண்டார்.

ஈரானிய தூதர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே இந்தியா தனது இருப்பை உருவாக்க விரும்புவதற்கு எந்தவொரு மறுப்பையும் குறிப்பிடவில்லை. பாகிஸ்தான் அரசால் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட இந்தியரான குல்பூஷன் ஜாதவ், சபாஹரிலிருந்து தான் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஹர் திட்டத்திற்கு இரு முக்கியமான விஷயங்கள் உள்ளன; துறைமுக சாலையும் மற்றும் ரயில் நெட்வொர்க்கும்தான் அது. துறைமுக சாலை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நகரங்களுடன் இணைகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோர் 2016ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.

இந்த P5 + 1 நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம், தெஹ்ரானை சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் வணிகம் மற்றும் வியாபாரத்தை எளிதாக மேற்கொள்ள, சர்வதேச வங்கியை அணுக அனுமதிக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து, ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததும், இந்த ஒப்பந்தத்துக்கு விடப்பட்ட சவாலாகும். ஈரானுடனான பொருளாதாரத் தடைகளால் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள் மறுத்ததால், துறைமுகத்தையும் ரயில் கட்டமைப்பையும் விரும்பிய வேகத்தில் இந்தியாவால் கட்ட முடியவில்லை.

Gen Qassem's assassination
ஈரான் 1

பெரும்பாலும், தெஹ்ரானுடனான அதன் ஈடுபாட்டைப் பற்றி அமெரிக்கா என்ன நினைத்தது என்பதை அறியவே இந்தியா காத்திருக்கிறது. தெஹ்ரானுடனான தனது நெருக்கத்தைப் பற்றி அமெரிக்கா ஏதாவது நினைத்துவிடுமோ என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, இந்தியா பொறுமையாகவே இருந்தது.

ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு சபாஹர் துறைமுகப்பணி முக்கியமானது என்று அமெரிக்கா கருதியதால், அதற்கு மட்டும் விலக்கு அளித்தது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பான இந்தியாவின் பிரச்னைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. வாஷிங்டனில் நடந்த 2 + 2 சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக சில உறுதிமொழிகளைப் பெற முடிந்தது; இது இந்தியாவுக்கு 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள சில உபகரணங்களை வாங்க அனுமதித்தது.

வர்த்தகத்தின் அளவை மேம்படுத்த, சபாஹர் துறைமுகங்களின் வணிகத் தொடர்புகள் அதிகரிக்க இந்தியா உறுதியளித்தது, இது சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) காலை காசிம் சுலைமானியை வீழ்த்த முடிவு செய்தபோது, ​​ஒவ்வொரு ஒப்பந்தமும் உறவுகளும் தீவிர கேள்விக்கு உட்பட்டுள்ளன. நாட்டின் துணிச்சலான மற்றும் மதிப்புமிக்க மகனை இழந்ததற்கு, நிச்சயம் பழிவாங்குவதாக ஈரானிய உயர்மட்ட தலைவரான அயோத்துல்லா கொமேனி உறுதியளித்த நிலையில், இந்தியா தனது ஈரானுடனான உறவுகளை எவ்வாறு தொடரும் என்பது யாருக்கும் தெரியாது.

Gen Qassem's assassination
மோடி

ஜெனரல் சுலைமானி ஒரு பிரபலமான மனிதர், ஒரு ராக் ஸ்டாராக, இன்ஸ்டாகிராமில் ஏராளமானோரால் பின்தொடரப்பட்டு வந்தார். ஈராக், சிரியா மற்றும் பிற பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தை தோற்கடித்த பெருமை அவருக்கு இருந்தது. அவர் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகவும் ஈராக்கில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றியவர்கள், அவரை ஆப்கானிஸ்தானில் ஒரு பரபரப்பான நபராக நினைவில் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் அவருடன் பணியாற்றியும் உள்ளனர்.

வலிமைான கண்களை உடைய அவர், அதிகம் பேச மாட்டார்; ஆனால் நிறைய கேட்டு உள்வாங்கிக் கொண்டார். இந்தியாவுக்கும் சில முறை வந்துள்ளார். இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லியில் நடந்த சில நடவடிக்கைளிலும் சுலைமானிக்குத் தொடர்பு உள்ளதாக கூறுகிறார்.

ஈரானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரேயொரு சம்பவம், டெல்லியில் இஸ்ரேலிய தூதர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தான். அது தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் சுலைமானியை டெல்லியுடன் தொடர்புப்படுத்தி குறிப்பிடுவதன் மூலம், தெஹ்ரான் நடவடிக்கையில் இருந்து டெல்லி உயர் அலுவலர்கள் வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். டெல்லி உயர் அலுவலர்கள் தனக்கு சார்பான முடிவை எடுக்க வேண்டும்; தெளிவற்ற நிலையில் இருக்கக்கூடாது என்று ட்ரம்ப் தெளிவாக விரும்புகிறார்.

அதிபர் ட்ரம்ப் சொல்வது தகுதியானதுதான் என்று இந்தியா கருதுமானால், சபாஹர் துறைமுகம் மீதான தனது ஈடுபாட்டைத் தொடர்வது இந்தியாவுக்குக் கடினமானதாக இருக்கும். இதில் மோசமானது என்னவென்றால், உலகளவில் சட்டவிரோதப் படுகொலை என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வலுக்கட்டாயப்படுத்தப்படலாம்.

இதையும் படிங்க: ஈரான் விமான விபத்து: அமெரிக்காவை விசாரணையில் பங்கேற்க அழைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அதிகாலையில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில், 62 வயதான ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்தது ஈரானை கோபமடையச் செய்தாலும், அதில் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை.

சுலைமானி, தாம் கொல்லப்படலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையின் (ஐ.ஆர்.ஜி.சி) வெளிப்புறக் குழுவான அல்-குட்ஸ் படையின் தளபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன. அவர், தன்னை எதிர்த்து போராடுபவர்களிடம் இருந்தே எதிர்ப்பு சக்தியை அனுபவிப்பதாகத் தோன்றியது.

'ஆபரேஷன் பாலைவனப் புயல்' என்ற நடவடிக்கைக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவால் அவர் ஏன் தாக்கப்படவில்லை என்பதற்கு சில காரணங்கள் இருந்தன. சுலைமானியின் படுகொலைக்கான உண்மையான காரணத்தை அறிய இன்னும் சில காலம் ஆகும். அதே நேரத்தில், அவரது மரணம் பல நாடுகளுடன் ஈரான் உருவாக்கிய நிதி உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

Gen Qassem's assassination
ஈரான் விவகாரம்

இந்தப் படுகொலைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஒரு பெரும் குழப்பம் உள்ளது. ஏனெனில், ஈரானை பிராந்திய நண்பராக இந்தியா கருதுகிறது. அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மக்ரான் கடற்கரையில் அமைந்துள்ள சபாஹரின் வளர்ச்சிக்கு கணிசமான நிதியை முதலீடு செய்ய இந்தியா முயல்கிறது.

ஈரானையோ, அமெரிக்காவையோ பகைத்துக் கொள்ள விரும்பாதா இந்தியா, கத்தி மேல் நடப்பது போல் ஈரானிய படைத்தளபதியின் மரணத்திற்கு வாய் திறக்காமல் கண்டனம் தெரிவிக்காமல், மாறாக இந்தியாவின் ஆர்வம் அவர் படுகொலைச் செய்யப்பட்டதன் காரணத்தை அறிந்து கொள்வதில்தான் இருந்தது.

இது அமெரிக்காவை மகிழ்ச்சியடையச் செய்யலாம்; ஆனால் இது தெஹ்ரானுக்கு ஆதரவானதாக இருக்காது. இது சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் நிர்வாக குத்தகைக்கு வழங்கும் வாய்ப்பைக் குறைத்துள்ளது.

Gen Qassem's assassination
ட்ரம்ப்

பாகிஸ்தானின் பலுச்சி துறைமுகமான குவாடரில் அதிக முதலீடு செய்துள்ள சீனா, சபாஹரிலும் துறைமுகம் கட்டுவதில் ஆர்வமாக இருந்தது; ஆனால் இப்பணியை இந்தியாவுக்குக் கொடுக்க ஈரானுக்குச் சில காரணங்கள் இருந்தன. ஓமன் கடலில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகம்தான் இந்தியாவின் முதல் வெளிநாட்டு முதலீடாகும். இது பாகிஸ்தானை ஓரங்கட்ட உதவுகிறது; மத்திய ஆசியாவுடன் தனது நில வழியை மீண்டும் உருவாக்க இந்தியாவுக்கு உதவுகிறது.

அல்-பெரூனியின் பயணக் கட்டுரைகளில் சபாஹர் துறைமுகம்தான் இந்துஸ்தானின் தொடக்கப் புள்ளியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் துறைமுக நகரத்தில் இந்தியாவின் முதலீடு என்பது இயற்கையான ஒன்றாகவே கருதப்படுகிறது. சபாஹருக்குப் பயணம் செய்தபோது, அந்த எழுத்தாளர் இந்துஸ்தானி மொழியை எளிதில் பேசுவதையும், இந்தியா பயணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும் கண்டார்.

ஈரானிய தூதர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே இந்தியா தனது இருப்பை உருவாக்க விரும்புவதற்கு எந்தவொரு மறுப்பையும் குறிப்பிடவில்லை. பாகிஸ்தான் அரசால் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட இந்தியரான குல்பூஷன் ஜாதவ், சபாஹரிலிருந்து தான் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஹர் திட்டத்திற்கு இரு முக்கியமான விஷயங்கள் உள்ளன; துறைமுக சாலையும் மற்றும் ரயில் நெட்வொர்க்கும்தான் அது. துறைமுக சாலை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நகரங்களுடன் இணைகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோர் 2016ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.

இந்த P5 + 1 நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம், தெஹ்ரானை சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் வணிகம் மற்றும் வியாபாரத்தை எளிதாக மேற்கொள்ள, சர்வதேச வங்கியை அணுக அனுமதிக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து, ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததும், இந்த ஒப்பந்தத்துக்கு விடப்பட்ட சவாலாகும். ஈரானுடனான பொருளாதாரத் தடைகளால் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள் மறுத்ததால், துறைமுகத்தையும் ரயில் கட்டமைப்பையும் விரும்பிய வேகத்தில் இந்தியாவால் கட்ட முடியவில்லை.

Gen Qassem's assassination
ஈரான் 1

பெரும்பாலும், தெஹ்ரானுடனான அதன் ஈடுபாட்டைப் பற்றி அமெரிக்கா என்ன நினைத்தது என்பதை அறியவே இந்தியா காத்திருக்கிறது. தெஹ்ரானுடனான தனது நெருக்கத்தைப் பற்றி அமெரிக்கா ஏதாவது நினைத்துவிடுமோ என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, இந்தியா பொறுமையாகவே இருந்தது.

ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு சபாஹர் துறைமுகப்பணி முக்கியமானது என்று அமெரிக்கா கருதியதால், அதற்கு மட்டும் விலக்கு அளித்தது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பான இந்தியாவின் பிரச்னைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. வாஷிங்டனில் நடந்த 2 + 2 சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக சில உறுதிமொழிகளைப் பெற முடிந்தது; இது இந்தியாவுக்கு 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள சில உபகரணங்களை வாங்க அனுமதித்தது.

வர்த்தகத்தின் அளவை மேம்படுத்த, சபாஹர் துறைமுகங்களின் வணிகத் தொடர்புகள் அதிகரிக்க இந்தியா உறுதியளித்தது, இது சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) காலை காசிம் சுலைமானியை வீழ்த்த முடிவு செய்தபோது, ​​ஒவ்வொரு ஒப்பந்தமும் உறவுகளும் தீவிர கேள்விக்கு உட்பட்டுள்ளன. நாட்டின் துணிச்சலான மற்றும் மதிப்புமிக்க மகனை இழந்ததற்கு, நிச்சயம் பழிவாங்குவதாக ஈரானிய உயர்மட்ட தலைவரான அயோத்துல்லா கொமேனி உறுதியளித்த நிலையில், இந்தியா தனது ஈரானுடனான உறவுகளை எவ்வாறு தொடரும் என்பது யாருக்கும் தெரியாது.

Gen Qassem's assassination
மோடி

ஜெனரல் சுலைமானி ஒரு பிரபலமான மனிதர், ஒரு ராக் ஸ்டாராக, இன்ஸ்டாகிராமில் ஏராளமானோரால் பின்தொடரப்பட்டு வந்தார். ஈராக், சிரியா மற்றும் பிற பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தை தோற்கடித்த பெருமை அவருக்கு இருந்தது. அவர் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகவும் ஈராக்கில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றியவர்கள், அவரை ஆப்கானிஸ்தானில் ஒரு பரபரப்பான நபராக நினைவில் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் அவருடன் பணியாற்றியும் உள்ளனர்.

வலிமைான கண்களை உடைய அவர், அதிகம் பேச மாட்டார்; ஆனால் நிறைய கேட்டு உள்வாங்கிக் கொண்டார். இந்தியாவுக்கும் சில முறை வந்துள்ளார். இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லியில் நடந்த சில நடவடிக்கைளிலும் சுலைமானிக்குத் தொடர்பு உள்ளதாக கூறுகிறார்.

ஈரானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரேயொரு சம்பவம், டெல்லியில் இஸ்ரேலிய தூதர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தான். அது தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் சுலைமானியை டெல்லியுடன் தொடர்புப்படுத்தி குறிப்பிடுவதன் மூலம், தெஹ்ரான் நடவடிக்கையில் இருந்து டெல்லி உயர் அலுவலர்கள் வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். டெல்லி உயர் அலுவலர்கள் தனக்கு சார்பான முடிவை எடுக்க வேண்டும்; தெளிவற்ற நிலையில் இருக்கக்கூடாது என்று ட்ரம்ப் தெளிவாக விரும்புகிறார்.

அதிபர் ட்ரம்ப் சொல்வது தகுதியானதுதான் என்று இந்தியா கருதுமானால், சபாஹர் துறைமுகம் மீதான தனது ஈடுபாட்டைத் தொடர்வது இந்தியாவுக்குக் கடினமானதாக இருக்கும். இதில் மோசமானது என்னவென்றால், உலகளவில் சட்டவிரோதப் படுகொலை என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வலுக்கட்டாயப்படுத்தப்படலாம்.

இதையும் படிங்க: ஈரான் விமான விபத்து: அமெரிக்காவை விசாரணையில் பங்கேற்க அழைப்பு!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.