ETV Bharat / bharat

கேரள, கர்நாடகாவுக்கு ரெட் அலெர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Aug 6, 2020, 2:01 PM IST

பெங்களூரு: கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

imd-issues-red-alert-for-coastal-karnataka-and-kerala
imd-issues-red-alert-for-coastal-karnataka-and-kerala

இந்தியாவின் கொங்கன் கடற்கரை, மேற்கு கடற்கரை ஆகியப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகள், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் தெற்கு கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூரு, ஹசன், சிமோகா ஆகியப் பகுதிகள், வடக்கு கர்நாடகாவின் முக்கியப் பகுதிகள் என 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வணிக அமைச்சர் அசோக் பேசுகையில், ''கன மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். சிக்மங்களூருவின் சிருங்கேரி மற்றும் முடிகேரி பகுதிகளில் மழையால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடகாவுக்கு ரெட் அலெர்ட்

கிராம பஞ்சாயத்து அளவில் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளோம், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவினால் சில மாவட்டங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, தார்வாட், பெல்காம், தட்சிணா ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பியுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

கனமழை காரணமாக, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தும், சாலைகளில் அதிகளவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கர்நாடக முதலமைச்சர் நலமுடன் உள்ளார்'- மருத்துவமனை தகவல்

இந்தியாவின் கொங்கன் கடற்கரை, மேற்கு கடற்கரை ஆகியப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகள், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் தெற்கு கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூரு, ஹசன், சிமோகா ஆகியப் பகுதிகள், வடக்கு கர்நாடகாவின் முக்கியப் பகுதிகள் என 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வணிக அமைச்சர் அசோக் பேசுகையில், ''கன மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். சிக்மங்களூருவின் சிருங்கேரி மற்றும் முடிகேரி பகுதிகளில் மழையால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடகாவுக்கு ரெட் அலெர்ட்

கிராம பஞ்சாயத்து அளவில் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளோம், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவினால் சில மாவட்டங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, தார்வாட், பெல்காம், தட்சிணா ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பியுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

கனமழை காரணமாக, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தும், சாலைகளில் அதிகளவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கர்நாடக முதலமைச்சர் நலமுடன் உள்ளார்'- மருத்துவமனை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.