கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயிலானது, வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களையும் வெயில் கடுமையாக வாட்டிவருகிறது. கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாள்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அம்மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெயிலில் கல்வி கற்கும் அவல நிலை!