காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில், ஹண்ட்வாரா நகரில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களைக் காவல் துறையினர் விசாரித்தனர். அதில், அவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குத் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 21 கிலோ ஹெராயினும், 1 கோடியே 34 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பயங்கரவாதிகளுக்குப் பணம், போதைப் பொருள் சப்ளை - 3 பேர் கைது!
காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குப் பணம், ஹெராயின் விநியோகம் செய்ய வந்த மூவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
![பயங்கரவாதிகளுக்குப் பணம், போதைப் பொருள் சப்ளை - 3 பேர் கைது! police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:13-7568505-arre.jpg?imwidth=3840)
இதுகுறித்து ஹண்ட்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.வி.சந்தீப் சக்கரவர்த்தி கூறுகையில், "பணப்புழக்கம் இல்லாத காரணத்தால், பணம் மாற்றப்பட்டு பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில், ஹண்ட்வாரா நகரில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களைக் காவல் துறையினர் விசாரித்தனர். அதில், அவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குத் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 21 கிலோ ஹெராயினும், 1 கோடியே 34 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஹண்ட்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.வி.சந்தீப் சக்கரவர்த்தி கூறுகையில், "பணப்புழக்கம் இல்லாத காரணத்தால், பணம் மாற்றப்பட்டு பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.