ராஜஸ்தான் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "ஓராண்டாக குஜராத்தில் இருந்துள்ளேன். சுதந்திரத்திற்கு பிறகிலிருந்து முழு மதுவிலக்கு அங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் குஜராத்தில் மக்கள் அதிகளவிலான மதுவை அருந்துகின்றனர். இதுதான் மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் நிலைமை.
ராஜஸ்தான் மாநிலத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்படவுள்ளதாக வெளியான வதந்தியை மறுக்கிறேன். சட்ட விரோதமான மது விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தனிப்பட்ட அளவில் முழு மது விலக்குக்கு ஆதரவாக உள்ளேன். ஆனால், சட்டவிரோதமான மது விற்பனைக்கு வழிவகுக்கும். 1977ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது, ஆனால் அது தோல்வியை சந்தித்தது" என்றார்.
சில போதை வஸ்துக்கு ராஜஸ்தான் அரசு அக்டோபர் 2ஆம் தேதி தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.