ETV Bharat / bharat

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி! பெட்ரோல் - டீசல் விலை குறையாமலிருக்க வரி உயர்த்திவரும் அரசு!

author img

By

Published : Mar 14, 2020, 11:31 AM IST

Updated : Mar 14, 2020, 7:20 PM IST

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமலிருக்க, அதன் மீதுள்ள கலால் வரியை அரசு அதிகரித்துவருவது, நாட்டு மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Petrol excise duty
Petrol excise duty

கொரோனா நோய்க் கிருமியின் தாக்கத்தால் நாடுகளிடையே ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் வீழ்ச்சியைக் கண்டது. அதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இவ்வேளையில் பெட்ரோல், டீசல் விலையைத் தற்போதுள்ள விலையிலே நிலைநிறுத்த மத்திய அரசு அதற்கான கலால் வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், பெட்ரோலுக்கான சிறப்புக் கலால் வரியை 2 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், டீசலுக்கு நான்கு ரூபாய் உயர்த்தியும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் வரியின் மீது போடப்படும் வரியான பெட்ரோல் - டீசலின் சாலை வரியை (Road Cess) ஒரு ரூபாய் கூட்டி 10 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 72 ரூபாய் 57 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 66 ரூபாய் 2 காசுகளுக்கும் விற்கப்படுகின்றன.

இதையும் படிங்க: விலை சரிந்த கச்சா எண்ணெய் - இந்தியாவில் அதன் தாக்கம் என்ன?

கொரோனா நோய்க் கிருமியின் தாக்கத்தால் நாடுகளிடையே ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் வீழ்ச்சியைக் கண்டது. அதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இவ்வேளையில் பெட்ரோல், டீசல் விலையைத் தற்போதுள்ள விலையிலே நிலைநிறுத்த மத்திய அரசு அதற்கான கலால் வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், பெட்ரோலுக்கான சிறப்புக் கலால் வரியை 2 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், டீசலுக்கு நான்கு ரூபாய் உயர்த்தியும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் வரியின் மீது போடப்படும் வரியான பெட்ரோல் - டீசலின் சாலை வரியை (Road Cess) ஒரு ரூபாய் கூட்டி 10 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 72 ரூபாய் 57 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 66 ரூபாய் 2 காசுகளுக்கும் விற்கப்படுகின்றன.

இதையும் படிங்க: விலை சரிந்த கச்சா எண்ணெய் - இந்தியாவில் அதன் தாக்கம் என்ன?

Last Updated : Mar 14, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.