ETV Bharat / bharat

கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது: 4.6 கிலோ கஞ்சா பறிமுதல்!

புதுச்சேரி: கஞ்சா விற்றதாக நான்கு இளைஞா்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 4.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 13, 2019, 10:15 PM IST

ganja
ganja

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தத்தில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாகத் தன்வந்திரி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான காவல் துறையினர், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து சோதனையிட்டனர்.

அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த பி. கனகராஜ் (22), புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ. ஷியாம் வேல்ஸ் (19), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காக்கா (எ) எம். சீனு (20), எம். ரித்விக்குமாா் (19) என்பதும் அவா்கள் அந்தப் பகுதியில் சிறு, சிறு பொட்டலங்களாகக் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

கஞ்சா விற்ற இளைஞர்கள்

இதையடுத்து, அவா்களைக் கைது செய்ததுடன் விற்பனைக்காக வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள், செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தத்தில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாகத் தன்வந்திரி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான காவல் துறையினர், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து சோதனையிட்டனர்.

அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த பி. கனகராஜ் (22), புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ. ஷியாம் வேல்ஸ் (19), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காக்கா (எ) எம். சீனு (20), எம். ரித்விக்குமாா் (19) என்பதும் அவா்கள் அந்தப் பகுதியில் சிறு, சிறு பொட்டலங்களாகக் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

கஞ்சா விற்ற இளைஞர்கள்

இதையடுத்து, அவா்களைக் கைது செய்ததுடன் விற்பனைக்காக வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள், செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

Intro:புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை போலீசார் அவர்களிடம் இருந்த 4.6 கஞ்சா பறிமுதல்
Body:புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை போலீசார் அவர்களிடம் இருந்த 4.6 கஞ்சா பறிமுதல்


புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தகத்தில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தன்வந்திரி நகா் காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சக்கர வாகனங்களில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த பி.கனகராஜ் (22), புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.ஷியாம் வேல்ஸ் (19), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காக்கா (எ) எம்.சீனு (20), எம்.ரித்விக்குமாா் (19) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.இதையடுத்து, அவா்களைக் கைது செய்ததுடன், விற்பனைக்காக வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், செல்லிடப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்...Conclusion:புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை போலீசார் அவர்களிடம் இருந்த 4.6 கஞ்சா பறிமுதல்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.