ETV Bharat / bharat

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - நான்கு பேர் கைது!

author img

By

Published : Dec 21, 2020, 3:07 PM IST

சண்டிகர்: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, ஐந்து பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் மீது 376 கூட்டு பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திவந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பஞ்சாபின் லூதியானாவின் துணை காவல்கண்கானிப்பாளர் குருபன்ஸ் சிங் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரிடம் நட்பாகியுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணை டாக்காவி, மண்டியானி கிராமத்திலுள்ள ஒரு பங்களாவில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவரை தேடி வருகிறோம். லூதியானாவின் சிவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது' என்றார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, ஐந்து பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் மீது 376 கூட்டு பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திவந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பஞ்சாபின் லூதியானாவின் துணை காவல்கண்கானிப்பாளர் குருபன்ஸ் சிங் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரிடம் நட்பாகியுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணை டாக்காவி, மண்டியானி கிராமத்திலுள்ள ஒரு பங்களாவில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவரை தேடி வருகிறோம். லூதியானாவின் சிவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.