மேற்கு வங்கம் மாநிலம் குல்வாமா-ஷிவோக் இடையே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக அந்த வழியாக வந்த யானை ஒன்று தண்டவாளம் அருகே வந்தது. இதனை பார்த்த என்ஜின் ஆபரேட்டர் ரயிலை நிறுத்தினார்.
இதனையடுத்து அந்த யானை நின்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினை தாக்கியது. பின்பு மெதுவாக தண்டவாளத்தின் வழியாக காட்டுக்குள் சென்றது. சில மணி நேரம் இந்த யானை தண்டவாளத்திலேயே நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.