நாட்டின் மிகப்பெரிய குடிசைப் பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமுமான தாராவியில் புதியதாக 94 கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆக, தாராவியில் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 20 ஆக உள்ளது. அதிக மக்கள் தொகை நெருக்கம், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் ஆகியவையே தாராவியில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகரிக்க காரணம் என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் 42 ஆயிரத்து 533 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுக்க 1,373 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிர் இழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 548 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்!