ETV Bharat / bharat

டெல்லியில் மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்!

author img

By

Published : Oct 23, 2020, 4:04 PM IST

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றின் தரம் 'மோசம்' என்ற நிலையிலிருந்து 'மிக மோசம்' என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

air quality in Delhi
air quality in Delhi

தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, வாகன புகை, கட்டட தூசு ஆகியவற்றுடன் அண்டை மாநில விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் இணைந்து கொள்வதால் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்து, காற்றின் தரமும் மேம்பட்டது.

இருப்பினும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம்போல இயங்க தொடங்கிவிட்டன. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமானது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் காற்று தர மதிப்பீடு 356ஆக உள்ளது.

அதேபோல தேசிய தலைநகர் பகுதிக்கு உள்பட்ட குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்று தர மதிப்பீடு முறையே 318 மற்றும் 386ஆகவுள்ளது. அதாவது, தேசிய தலைநகர் பகுதியல் காற்றின் தரம் தற்போது மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்றின் வேகம் அதிகரித்ததால் காற்று மாசு 'மோசம்' என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரம்பின் இந்திய விமர்சனம், காங்கிரஸ் சாடல்

தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, வாகன புகை, கட்டட தூசு ஆகியவற்றுடன் அண்டை மாநில விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் இணைந்து கொள்வதால் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்து, காற்றின் தரமும் மேம்பட்டது.

இருப்பினும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம்போல இயங்க தொடங்கிவிட்டன. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமானது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் காற்று தர மதிப்பீடு 356ஆக உள்ளது.

அதேபோல தேசிய தலைநகர் பகுதிக்கு உள்பட்ட குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்று தர மதிப்பீடு முறையே 318 மற்றும் 386ஆகவுள்ளது. அதாவது, தேசிய தலைநகர் பகுதியல் காற்றின் தரம் தற்போது மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்றின் வேகம் அதிகரித்ததால் காற்று மாசு 'மோசம்' என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரம்பின் இந்திய விமர்சனம், காங்கிரஸ் சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.