டெல்லி: விநாயகர் சிலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடையை எதிர்த்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்துள்ளதாக அதன் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலையை, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கச் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில், மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து ட்வீட் செய்துள்ள மத்திய அமைச்சர், “விநாயகர் சிலைகளை செய்ய சிறு தொழிலாளர்கள் முன்னதாகவே முனைப்புக் காட்டி பாதி வேலைகளை முடித்துள்ளனர். கரோனா காலங்களின் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.