ETV Bharat / bharat

முதலமைச்சர் முதல் ஊழியர் வரை... ஒருமாத சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த மகாராஷ்டிரா அரசு

author img

By

Published : Mar 31, 2020, 3:59 PM IST

மும்பை: கரோனா வைரசால் பல்வேறு மாநிலங்களிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உள்பட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளக் குறைப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

covid-19-crisis-60-percent-cut-in-salaries-of-maharashtra-mlas-mlcs
covid-19-crisis-60-percent-cut-in-salaries-of-maharashtra-mlas-mlcs

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க மகாராஷ்டிரா அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் கலந்துகொண்டார்.

இதில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஒருமாத சம்பளக் குறைப்பு செய்யப்படவுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், ''மார்ச் மாதம் வழங்கப்படவுள்ள சம்பளத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் 60 சதவிகிதம் அரசால் பிடிக்கப்படும்.

அரசு வேலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு 50 சதவிகித சம்பளமும், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு 25 சதவிகித சம்வளமும் பிடிக்கப்படும். விளிம்பு நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் இருக்காது.

கரோனா வைரசிற்கு எதிரான மாநில அரசு செய்து வரும் நடவடிக்கைகளுக்காக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடனும், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவைப் பின்பற்றி தற்போது மகாராஷ்ட்டிராவிலும் அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளப் பிடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மே 31ஆம் தேதிவரை பயிர்க்கடன் சலுகைகள் நீட்டிப்பு

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க மகாராஷ்டிரா அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் கலந்துகொண்டார்.

இதில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஒருமாத சம்பளக் குறைப்பு செய்யப்படவுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், ''மார்ச் மாதம் வழங்கப்படவுள்ள சம்பளத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் 60 சதவிகிதம் அரசால் பிடிக்கப்படும்.

அரசு வேலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு 50 சதவிகித சம்பளமும், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு 25 சதவிகித சம்வளமும் பிடிக்கப்படும். விளிம்பு நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் இருக்காது.

கரோனா வைரசிற்கு எதிரான மாநில அரசு செய்து வரும் நடவடிக்கைகளுக்காக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடனும், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவைப் பின்பற்றி தற்போது மகாராஷ்ட்டிராவிலும் அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளப் பிடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மே 31ஆம் தேதிவரை பயிர்க்கடன் சலுகைகள் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.