இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஆண்டுதோறும் 12 முதல் 15 லட்சம் பருத்தி பேல்கள் (மூட்டைகள்) ஏற்றுமதி ஆகிறது. இந்த நிலையில் சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம், அச்சம் காரணமாக பருத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சீனா முழுமையான தடை விதித்துள்ளது. இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று லட்சம் பருத்தி மூட்டைகள் வரை தேங்கி நிற்கின்றன.
மேலும் பருத்தி மூட்டைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையும் போதிய அளவில் இல்லை. தற்போது பருத்தி மூட்டை ஒன்றுக்கு, ரூ.5 ஆயிரத்து 450 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலும் 50 விழுக்காடு பருத்தி மூட்டைகள் கிடங்கில், தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி, தனியார் ஸ்பின்னிங் மில்லுக்குப் பருத்தி மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவன முதலாளிகள், பருத்தி மூட்டையை ரூ.4 ஆயிரத்து 700 முதல் ரூ. 4 ஆயிரத்து 800 ரூபாய் வரை விற்பனைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: அறை எண் 46-Iல் திமுக , வெளியேறிய அதிமுக - நாடாளுமன்றத்தில் நடந்த அறை அரசியல்!