இந்தியா முழுவதும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் சிறப்பு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டாலும், வெகுஜன மக்கள், பேருந்து, டிரக் மூலமாகவும் சிலர் நடை பயணமாகவும் செல்கின்றனர். அதில், பசி, பட்டினியால் உயிரிழக்கின்றனர்.
இது தொடர்பான பிரச்னைகளை களைய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் இணைந்து 'இந்தியர்களே பேசுங்கள்' (Speak Up India) என்னும் தலைப்பில் ஆன்லைனில் பரப்புரை தொடங்கியுள்ளனர்.
அதில், குடிபெயர் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஆறு மாதங்களுக்கு தலா ஏழாயிரத்து 500 ரூபாய் செலுத்தக்கூறியும், உடனடி நிவாரணமாக பத்தாயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்துவதோடு நடந்துச் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச வாகனங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், "இதுபோன்ற பேரிடர் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். இதை நான் குறிப்பாக பாஜகவிற்கு சொல்கிறன். உத்தரப் பிரதேசத்தில் குடிபெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், பாஜக 12 ஆயிரம் பேருந்துகள் இயக்குவதாகக் கூறி எங்கள் ஏற்பாட்டை புறம் தள்ளியது" என்றார்.
இதையும் படிங்க: 'கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 30 இந்திய குழுக்கள்'