ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான ரியாஸ் நாய்கோவை புதன் கிழமை இரவு (மே 5) சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீர் பகுதியில் இணையச் சேவை முடக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் இந்த செயலை பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டிவருகின்றனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரியாஸ் நாய்கோ என்ற பயங்கரவாதியை நீதிக்கு முன் நிறுத்திய பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகள். அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதிகள் ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
-
I congratulate our security forces for bringing the terrorist, Riyaz Naikoo, to justice. The killing of innocent people by terrorists must never go unpunished.
— Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I congratulate our security forces for bringing the terrorist, Riyaz Naikoo, to justice. The killing of innocent people by terrorists must never go unpunished.
— Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2020I congratulate our security forces for bringing the terrorist, Riyaz Naikoo, to justice. The killing of innocent people by terrorists must never go unpunished.
— Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2020
அதேபோல காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் வீர தீரச் செயலுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
आज के एनकाउंटर में हमारी सेना ने हिजबुल आतंकी संगठन के कमांडर को मार गिराया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
भारतीय सेना के जवानों और उनके पराक्रम को नमन।
जय हिन्द।
">आज के एनकाउंटर में हमारी सेना ने हिजबुल आतंकी संगठन के कमांडर को मार गिराया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 6, 2020
भारतीय सेना के जवानों और उनके पराक्रम को नमन।
जय हिन्द।आज के एनकाउंटर में हमारी सेना ने हिजबुल आतंकी संगठन के कमांडर को मार गिराया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 6, 2020
भारतीय सेना के जवानों और उनके पराक्रम को नमन।
जय हिन्द।
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "கோவிட்-19 தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்குத் தொடர்ந்து பயங்கரவாதிகளை அனுப்பிவருகின்றனர். இருந்தாலும் பயங்கரவாதிகளை அழிக்க இந்திய பாதுகாப்புப் படை மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை பெருமையடைய வைக்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: 'விஷவாயு விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' - ராகுல் காந்தி