ETV Bharat / bharat

அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் - சத்தீஸ்கர் அரசு

author img

By

Published : May 29, 2020, 3:56 PM IST

ராய்ப்பூர்: பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை (DJ) பயன்படுத்த சத்தீஸ்கர் அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல்
பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல்

கரோனா தொற்றால் விவசாயிகள் ஒருபுறம் பாதித்திருக்க மறுபுறம் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் பயிர்களின் மீது தாக்குதலை நடத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் மட்டுமில்லாமல் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகள் (DJ) கொண்டு அதனை விரட்டிவருவதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் புகுந்ததால் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.

இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் உத்தரப் பிரதேச மாநில நந்த்கான் வழியாக கவர்தா மாவட்டத்தின் லோஹாரா கிராமத்தின் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகங்களும், விவசாயிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அதேசமயம் இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்காகத் தீயணைப்புப் படையினர் எச்சரிக்கையாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து நேற்று (மே 28) மத்திய வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்னும் 15 நாள்களில் 15 பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் பிரிட்டனிலிருந்து வரவுள்ளதாகத் கூறியிருந்தார். மேலும் வெட்டுக்கிளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தங்களின் நேர்ப்பார்வையில் இருப்பதாகக் கூறி அருகில் உள்ள மாநிலங்களுக்கும் எச்சரிக்கை ஆலோசனை வழங்கினார்.

நமது நாட்டில் படையெடுத்திருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதன் வெட்டுக்கிளி இனத்திலேயே சற்று மாறுபட்டு குறுகிய கொம்பு கொண்டவையாகும்.

இவைகள் பருத்திப் பயிர்கள், காய்கறிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கில் வரும் இந்த வெட்டுக்கிளிகள் தங்கள் பாதையில் இருக்கும் அனைத்து தாவரங்களையும் உணவாக உட்கொள்ளக் கூடியவையாகும். இதற்கு முன் இதுபோன்ற அனுபவம் இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு!

கரோனா தொற்றால் விவசாயிகள் ஒருபுறம் பாதித்திருக்க மறுபுறம் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் பயிர்களின் மீது தாக்குதலை நடத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் மட்டுமில்லாமல் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகள் (DJ) கொண்டு அதனை விரட்டிவருவதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் புகுந்ததால் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.

இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் உத்தரப் பிரதேச மாநில நந்த்கான் வழியாக கவர்தா மாவட்டத்தின் லோஹாரா கிராமத்தின் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகங்களும், விவசாயிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அதேசமயம் இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்காகத் தீயணைப்புப் படையினர் எச்சரிக்கையாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து நேற்று (மே 28) மத்திய வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்னும் 15 நாள்களில் 15 பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் பிரிட்டனிலிருந்து வரவுள்ளதாகத் கூறியிருந்தார். மேலும் வெட்டுக்கிளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தங்களின் நேர்ப்பார்வையில் இருப்பதாகக் கூறி அருகில் உள்ள மாநிலங்களுக்கும் எச்சரிக்கை ஆலோசனை வழங்கினார்.

நமது நாட்டில் படையெடுத்திருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதன் வெட்டுக்கிளி இனத்திலேயே சற்று மாறுபட்டு குறுகிய கொம்பு கொண்டவையாகும்.

இவைகள் பருத்திப் பயிர்கள், காய்கறிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கில் வரும் இந்த வெட்டுக்கிளிகள் தங்கள் பாதையில் இருக்கும் அனைத்து தாவரங்களையும் உணவாக உட்கொள்ளக் கூடியவையாகும். இதற்கு முன் இதுபோன்ற அனுபவம் இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.