ETV Bharat / bharat

தமிழ்நாட்டு மண்ணில் வெற்றிகரமாக முடிந்த சந்திராயன்-2 சோதனை ஓட்டம்

author img

By

Published : Jul 13, 2019, 9:07 PM IST

Updated : Jul 13, 2019, 9:59 PM IST

சேலம்: இந்தியாவில் இருந்து வரும் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள சந்திராயன் - 2 யின் சோதனை ஓட்டத்திற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி மற்றும் குன்ன மலைக்கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 'லூனார் சாயில்' பயன்படுத்தப்பட்டது.

'பாகுபலி' சந்திராயன்-2

இந்திய விண்வெளி ஆய்வு பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திராயன் - 2 விண்கலம் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும். அதன் முன்னோட்டத்திற்காக நிலவில் உள்ள தரைப் பரப்பைப் போன்ற இடத்தை தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்ன மலைக் கிராம மலைப்பகுதிகளில் 'லூனார் சாயில்' இருப்பதாகக் கண்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து பாறைகளை வெட்டி பெங்களூருக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் இடம் பெற்றார். இந்த ஆய்வு குறித்து ஈடிவி பாரத் செய்திக்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சந்திராயன்-2 லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. ஏற்கனவே நாங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் வகையில் தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என்பதை இந்திய விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருந்தனர்.

அவர்கள் எங்களை நாடியதும் எங்களிடம் உள்ள ஆய்வு முடிவுகளின்படி நாமக்கல் மாவட்டம் சித்தம் பூண்டி, குன்னமலைப் மலைப்பகுதிகளில் நிலவின் தரை பரப்பில் உள்ள 'அனார்த்த சைட்' பாறை வகைகள் இருப்பதைத் தெரிவித்தோம். அந்தப் பாறை வகையை இஸ்ரோ விஞ்ஞானி வேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தது. பின்னர் அந்த பாறை வகையைப் பயன்படுத்தி 50 டன் அளவிற்கு மாதிரிகள் சேகரித்து பெங்களூருவிற்கு அனுப்பினோம்.

அன்பழகன்

அங்கு உள்ள ஆய்வு படுகையில் இந்த அனார்த்தசைட் பாறை வகையை அமைத்து அதில் சந்திராயன்-2 லேண்ட் ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறனை வெற்றிகரமாகச் சோதித்து பரிசோதனையை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் நிறைவு செய்தது. இதனையடுத்து நாளை மறுநாள் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திராயன் - 2 விண்கலம் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும். அதன் முன்னோட்டத்திற்காக நிலவில் உள்ள தரைப் பரப்பைப் போன்ற இடத்தை தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்ன மலைக் கிராம மலைப்பகுதிகளில் 'லூனார் சாயில்' இருப்பதாகக் கண்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து பாறைகளை வெட்டி பெங்களூருக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் இடம் பெற்றார். இந்த ஆய்வு குறித்து ஈடிவி பாரத் செய்திக்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சந்திராயன்-2 லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. ஏற்கனவே நாங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் வகையில் தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என்பதை இந்திய விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருந்தனர்.

அவர்கள் எங்களை நாடியதும் எங்களிடம் உள்ள ஆய்வு முடிவுகளின்படி நாமக்கல் மாவட்டம் சித்தம் பூண்டி, குன்னமலைப் மலைப்பகுதிகளில் நிலவின் தரை பரப்பில் உள்ள 'அனார்த்த சைட்' பாறை வகைகள் இருப்பதைத் தெரிவித்தோம். அந்தப் பாறை வகையை இஸ்ரோ விஞ்ஞானி வேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தது. பின்னர் அந்த பாறை வகையைப் பயன்படுத்தி 50 டன் அளவிற்கு மாதிரிகள் சேகரித்து பெங்களூருவிற்கு அனுப்பினோம்.

அன்பழகன்

அங்கு உள்ள ஆய்வு படுகையில் இந்த அனார்த்தசைட் பாறை வகையை அமைத்து அதில் சந்திராயன்-2 லேண்ட் ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறனை வெற்றிகரமாகச் சோதித்து பரிசோதனையை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் நிறைவு செய்தது. இதனையடுத்து நாளை மறுநாள் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

Intro:சந்திராயன் 2 லேண்டர் மற்றும் ரோவர் பரிசோதனை நாமக்கல் மாவட்ட மலை பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.


Body:சந்திராயன் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப் படுவதற்கு முன்பு கடந்த 2008ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

அந்த சோதனைக்காக பெங்களூருவில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.டி.இ. பகுதியில் 30 முதல் 40 மீட்டர் உயரம் , நீளம், அகலம் கொண்ட ஆய்வக படுகை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில், சந்திராயன்1 விண்கலத்தின் லேண்டர், ரோவர் ஓட விடப்பட்டு அவை சரியாக இயங்குகிறதா என்று பரிசோதிக்கப்பட்டது.

அந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னரே சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திராயன் 2 விண்கலம் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தின் லேண்டர் , ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் முடிவு செய்து அதற்காக நிலவில் உள்ள தரைப் பரப்பை போன்ற இடத்தை தமிழகத்தில் தேர்வு செய்தனர்.

விஞ்ஞானிகள் தேர்வு செய்த இடம் நாமக்கல் மாவட்டம் சித்தம் பூண்டி , குன்னமலை கிராம மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த பகுதியில் யூ.ஆர். எஸ்.சி. விஞ்ஞானிகள் பாறை பகுதிகளை ஆய்வு செய்து அதில் சந்திராயன்-2 லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடு திறனை பரிசோதித்தனர். சித்தம் பூண்டி, குன்னமலை பகுதிகளில் அனர்த்தோசைட் என்ற கனிம வகை பாறைகள் அதிகம் உள்ளன.

இந்த பாறை வகைகள் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன .ஆனாலும் அங்கிருந்து பாறை வகைகளை இறக்குமதி செய்து சந்திராயன்-2 லேண்டர், ரோவர் பகுதிகளை சோதனை செய்வது அதிக செலவு ஆகும் என்பதால், மிகக் குறைந்த செலவில் நாமக்கல் மாவட்ட மலைப் பாறைகளை கொண்டு வெற்றிகரமாக சந்திராயன்-2 லேண்ட் ரோவர் ஓடு திறன் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுக் குழுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவித் தகவல் மைய இயக்குனர் பேராசிரியர் அன்பழகன் இடம் பெற்று ஆய்வு நடத்தியது குறித்து இ டிவி பாரத் செய்திகளுக்காக பிரத்தியேக பேட்டி அளித்தார்.




Conclusion:நிலவில் உள்ள தரை அமைப்பு தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும் இருப்பது ஆச்சரியமான ஒன்று . சந்திராயன் 2 விண்கலம் தமிழக மலைப்பாறைகளில் நடைபயின்ற வெற்றி செய்தியோடு நிலவுக்குச் சென்று அங்கிருந்து தொடர்ச்சியாக ஆய்வு புகைப்படங்களை அனுப்பி இந்திய விண்வெளி திறனை அகிலம் அறியச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.
Last Updated : Jul 13, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.