ETV Bharat / bharat

கட்சி மாறிய சிந்தியா, காயின் வெளியிட்டு மரியாதை செலுத்திய பாஜக

author img

By

Published : May 20, 2020, 5:33 PM IST

போபால்: பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான மறைந்த விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முகம் பதிந்த 100 ரூபாய் காயின் வெளியிடப்படவுள்ளது.

scindia
scindia

பாஜகவின் தாய் கட்சி ஜன சங்கமாகும். இந்த கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய ராஜே சிந்தியா. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், முதலமைச்சர் டி. பி. மிஸ்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி ஜன சங்கத்தில் இணைந்தார்.

விஜயா ராஜே சிந்தியாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் விஜய ராஜே சிந்தியாவின் மகளுமான வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "அம்மா மகாராஜ், ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் நினைவை போற்றும் வகையில் வெளியாகவுள்ள 100 ரூபாய் காயின் மூலம் அவரின் பெருந்தன்மை, உழைப்பு ஆகியவை பறைசாற்றப்படுகிறது.

உன்னத கருத்துக்கள் மூலம் தேசத்திற்கு பங்களித்த ராஜமாதாவை அரசு கவுரவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

  • अम्मा महाराज, राजमाता विजयाराजे सिंधिया जी की स्मृति में 100 रु के सिक्के का अनावरण उनके उदार चरित्र व महान कृतित्व को जाहिर करता है। राजमाता जी के आदर्शों व राष्ट्रोत्थान में योगदान को समर्पित भारत सरकार के इस सम्मान के लिए आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी का आभार। pic.twitter.com/9Y6x7mDnr6

    — Vasundhara Raje (@VasundharaBJP) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

50 விழுக்காடு வெள்ளி, 40 விழுக்காடு செம்பு, 5 விழுக்காடு துத்தநாகம், 5 விழுக்காடு நிக்கல் ஆகியவற்றின் கலப்பில் 35 கிராம் எடையில் இந்த நாணயம் தயாரிக்கப்படவுள்ளது. இந்த 100 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கு 2,300 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இவரின் கொள்ளு பேரன்களில் ஒருவர் ஜோதிராதித்யா சிந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமரின் கனவு திட்டத்திற்கு முடிவுரை எழுதப்படுகிறதா?

பாஜகவின் தாய் கட்சி ஜன சங்கமாகும். இந்த கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய ராஜே சிந்தியா. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், முதலமைச்சர் டி. பி. மிஸ்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி ஜன சங்கத்தில் இணைந்தார்.

விஜயா ராஜே சிந்தியாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் விஜய ராஜே சிந்தியாவின் மகளுமான வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "அம்மா மகாராஜ், ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் நினைவை போற்றும் வகையில் வெளியாகவுள்ள 100 ரூபாய் காயின் மூலம் அவரின் பெருந்தன்மை, உழைப்பு ஆகியவை பறைசாற்றப்படுகிறது.

உன்னத கருத்துக்கள் மூலம் தேசத்திற்கு பங்களித்த ராஜமாதாவை அரசு கவுரவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

  • अम्मा महाराज, राजमाता विजयाराजे सिंधिया जी की स्मृति में 100 रु के सिक्के का अनावरण उनके उदार चरित्र व महान कृतित्व को जाहिर करता है। राजमाता जी के आदर्शों व राष्ट्रोत्थान में योगदान को समर्पित भारत सरकार के इस सम्मान के लिए आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी का आभार। pic.twitter.com/9Y6x7mDnr6

    — Vasundhara Raje (@VasundharaBJP) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

50 விழுக்காடு வெள்ளி, 40 விழுக்காடு செம்பு, 5 விழுக்காடு துத்தநாகம், 5 விழுக்காடு நிக்கல் ஆகியவற்றின் கலப்பில் 35 கிராம் எடையில் இந்த நாணயம் தயாரிக்கப்படவுள்ளது. இந்த 100 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கு 2,300 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இவரின் கொள்ளு பேரன்களில் ஒருவர் ஜோதிராதித்யா சிந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமரின் கனவு திட்டத்திற்கு முடிவுரை எழுதப்படுகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.