ETV Bharat / bharat

ஆழ்துளைக் கிணறுகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும்!

author img

By

Published : Oct 27, 2019, 1:21 AM IST

ஆழ்துளைக் கிணறுகளுக்கு எதிராக கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் விதித்தபோதிலும், தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. விதிகள் அமல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் அதனை சரியாக பின்பற்றுவதில் அனைவரின் பங்கு உள்ளது.

SC

ஒரு சிறு கவனக்குறைவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று பார்த்தால் புரியும். தொடர் அழுகுரல் அனைத்து அறைகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த மாதிரியான உயிரிழப்புகள் அரசுகளின் கவனக்குறைவால் மட்டும் நிகழ்வதில்லை, தனிமனிதர்களின் மெத்தனத்தாலும் நிகழ்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். அவர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். மேலும், ஐந்தாண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றை சரியாக அடைத்திருக்க வேண்டும். இதுபோன்ற சிறு சிறு கவனக்குறைவே இதுபோன்ற பெரும் துயரத்திற்கு காரணம்.

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளால் தொடர் உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் நிகழ்ந்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு ஒருவர் கடிதம் எழுதுகிறார். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பொது நல வழக்காக நீதிமன்றம் எடுத்து விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், இதுபோன்ற பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது. ஆனால், அனைத்தையும் கடினமாக்கிக் கொள்கிறீர்கள் என குறிப்பிட்டார். அவர் உதித்த சொற்கள் இன்றளவும் பொருந்தும். பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அடைக்காமல் இருக்கும் அரசின் அலட்சியம் பல சுஜித்துகளை காவு வாங்கியுள்ளது.

2010ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இந்திரா ஜெய்சிங், துளைகளை உருவாக்கிவிட்டு அதனை கேட்பாரற்று விட்டுபோகும் நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறார். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது. பின்னர், பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை 12 வாரங்களுக்குள் மூட அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த 12 வார காலம் இன்னும் வரவில்லைபோலும், இந்த மெத்தனபோக்குதான் சுஜித் போன்ற குழந்தைகள் அவதிப்படுவதற்கு காரணம்.

மூன்று வயதான தில்ராஜ்பிரித் என்ற குழந்தை பஞ்சாபின் பட்டாலா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்தது. இந்த மாதிரியான உயிரிழப்புகளை தடுக்க வழிமுறைகளை வகுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியது. பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியது. 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி, ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணற்றை தோண்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

இப்படி பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தபோதிலும், மாநில அரசுகள் இவற்றிலிருந்து எந்த பாடங்களையும் கற்றதாக தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டாலும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே செல்கிறது. தனிமனிதர்கள் முதல் அரசுவரை அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்தால் பல சுஜித்துகளின் உயிரை காப்பாற்றாலாம். இம்மாதிரியான சம்பவங்களையே தவிர்த்துவிடலாம்.

இதையும் படிங்க: ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்!

ஒரு சிறு கவனக்குறைவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று பார்த்தால் புரியும். தொடர் அழுகுரல் அனைத்து அறைகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த மாதிரியான உயிரிழப்புகள் அரசுகளின் கவனக்குறைவால் மட்டும் நிகழ்வதில்லை, தனிமனிதர்களின் மெத்தனத்தாலும் நிகழ்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். அவர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். மேலும், ஐந்தாண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றை சரியாக அடைத்திருக்க வேண்டும். இதுபோன்ற சிறு சிறு கவனக்குறைவே இதுபோன்ற பெரும் துயரத்திற்கு காரணம்.

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளால் தொடர் உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் நிகழ்ந்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு ஒருவர் கடிதம் எழுதுகிறார். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பொது நல வழக்காக நீதிமன்றம் எடுத்து விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், இதுபோன்ற பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது. ஆனால், அனைத்தையும் கடினமாக்கிக் கொள்கிறீர்கள் என குறிப்பிட்டார். அவர் உதித்த சொற்கள் இன்றளவும் பொருந்தும். பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அடைக்காமல் இருக்கும் அரசின் அலட்சியம் பல சுஜித்துகளை காவு வாங்கியுள்ளது.

2010ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இந்திரா ஜெய்சிங், துளைகளை உருவாக்கிவிட்டு அதனை கேட்பாரற்று விட்டுபோகும் நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறார். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது. பின்னர், பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை 12 வாரங்களுக்குள் மூட அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த 12 வார காலம் இன்னும் வரவில்லைபோலும், இந்த மெத்தனபோக்குதான் சுஜித் போன்ற குழந்தைகள் அவதிப்படுவதற்கு காரணம்.

மூன்று வயதான தில்ராஜ்பிரித் என்ற குழந்தை பஞ்சாபின் பட்டாலா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்தது. இந்த மாதிரியான உயிரிழப்புகளை தடுக்க வழிமுறைகளை வகுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியது. பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியது. 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி, ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணற்றை தோண்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

இப்படி பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தபோதிலும், மாநில அரசுகள் இவற்றிலிருந்து எந்த பாடங்களையும் கற்றதாக தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டாலும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே செல்கிறது. தனிமனிதர்கள் முதல் அரசுவரை அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்தால் பல சுஜித்துகளின் உயிரை காப்பாற்றாலாம். இம்மாதிரியான சம்பவங்களையே தவிர்த்துவிடலாம்.

இதையும் படிங்க: ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்!

Intro:Body:

Borewell


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.