ETV Bharat / bharat

பாஜக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 10, 2019, 10:24 AM IST

புதுச்சேரி: மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

pondy cm

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவரை சர்வாதிகாரமாக கைது செய்ததாகக் கூறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "அதிகார துஷ்பிரயோக செயலை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. மேலும் இலவச அரிசி திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதுவும் கூறாமல் தற்போது ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநரை சந்தித்தபின் அரிசி கொள்முதலில் சிபிஐ விசாரணை தேவை என்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவரை சர்வாதிகாரமாக கைது செய்ததாகக் கூறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "அதிகார துஷ்பிரயோக செயலை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. மேலும் இலவச அரிசி திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதுவும் கூறாமல் தற்போது ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநரை சந்தித்தபின் அரிசி கொள்முதலில் சிபிஐ விசாரணை தேவை என்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Intro:மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வதாக
,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.Body:மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வதாக
,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


அரசியல் சுய லாபத்திற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சர்வாதிகாரமாக கைது செய்ததாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முதல்வர் நாராயணசாமி,அமைச்சரும் மாநிலத்தலைவருமான நமச்சிவாயம், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத்,அமைச்சர் கந்தசாமி,மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அதிகார துஷ்பிரயோக செயலை மத்திய பாஜக அரசு செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.மேலும் இலவச அரிசி திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதுவும் கூறாமல் தற்போது ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநரை சந்தித்த பின் அரிசி கொள்முதலில் சிபிஐ விசாரணை தேவை என்கின்றனர் என்றார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பாஜக தலைவர் ஆக்கிவிடுங்கள்.பிரச்சனை ஏற்படாது என்ற அவர்,பதவி இன்று இருக்கும் நாளை போய்விடும்,கட்சி முக்கியம்,கட்சிக்காக ரத்தம் சிந்த தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் நாராயணசாமி தொண்டர்களிடம் பேசினார்.Conclusion:மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வதாக
,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.