ETV Bharat / bharat

விவசாயிகளுக்காக இளைஞரின் புதிய பைக் பம்ப் கண்டுபிடிப்பு - விவசாயிகளுக்காக இளைஞரின் புதிய பைக் பம்ப் கண்டுபிடிப்பு

அமராவதி: மின்சாரம் இல்லாமல் பைக் மூலம் விவசாய மோட்டரை இயக்கி அதன்மூலம் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்விதமாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

விவசாயிகளுக்காக இளைஞரின் புதிய பைக் பம்ப் கண்டுபிடிப்பு...!
விவசாயிகளுக்காக இளைஞரின் புதிய பைக் பம்ப் கண்டுபிடிப்பு...!
author img

By

Published : Sep 29, 2020, 11:36 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெலுங்குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலா திலீப் குமார். இவர் ஊரில் உள்ள விவசாயிகள் மின்சாரமில்லாமல் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, தன்னால் முடிந்த அளவு விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என எண்ணி, ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். அதன் விளைவாக பைக்கில் மோட்டாரைப் பொருத்தி இயக்கும்விதமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் மின்சாரம் இல்லாமல் பம்பிலிருந்து நீர் பாய்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் செலவில் ஒன்றரை மணி நேரம் வரை தண்ணீர் பாய்ச்சலாம். இதனால் விவசாயிகளுக்கு வருடந்தோறும் ஆகும் செலவு குறைகிறது.

இதையும் படிங்க..பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெலுங்குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலா திலீப் குமார். இவர் ஊரில் உள்ள விவசாயிகள் மின்சாரமில்லாமல் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, தன்னால் முடிந்த அளவு விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என எண்ணி, ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். அதன் விளைவாக பைக்கில் மோட்டாரைப் பொருத்தி இயக்கும்விதமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் மின்சாரம் இல்லாமல் பம்பிலிருந்து நீர் பாய்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் செலவில் ஒன்றரை மணி நேரம் வரை தண்ணீர் பாய்ச்சலாம். இதனால் விவசாயிகளுக்கு வருடந்தோறும் ஆகும் செலவு குறைகிறது.

இதையும் படிங்க..பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.