ETV Bharat / bharat

மது போதையில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக்கொலை!

புதுச்சேரி: மது குடித்திருந்த போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 16, 2020, 6:15 PM IST

மது போதையில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
மது போதையில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை

புதுச்சேரி அருகே வில்லியனூர் அடுத்த உறுவையாறு பேட் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (35). நேற்று முன்தினம் (அக். 14) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சேர்ந்து அந்தப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை கூட இருந்தவர் கத்தியால் குத்தினார். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் பகுதி காவல் துறையினர் அங்கு வந்து, அவரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதுச்சேரி அருகே வில்லியனூர் அடுத்த உறுவையாறு பேட் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (35). நேற்று முன்தினம் (அக். 14) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சேர்ந்து அந்தப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை கூட இருந்தவர் கத்தியால் குத்தினார். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் பகுதி காவல் துறையினர் அங்கு வந்து, அவரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் திறக்கப்பட்ட திரையரங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.