ETV Bharat / bharat

'மந்திரமே மருந்து' - கம்பியென்னும் கரோனா பாபா!

author img

By

Published : Mar 20, 2020, 11:16 PM IST

வாரணாசி: கரோனா வைரஸை அழிக்க வந்த பாபா என்று தன்னை தானே பிரகடனப்படுத்திய ஜோதிடரை காவலர்கள் கைது செய்தனர்.

astrologer held  astrologer held for claiming COVID-19 cure  COVID-19  இந்தியாவில் கரோனா வைரஸ்  கம்பியென்னும் கரோனா பாபா  வாரணாசியில் கரோனா பாபா
astrologer held astrologer held for claiming COVID-19 cure COVID-19 இந்தியாவில் கரோனா வைரஸ் கம்பியென்னும் கரோனா பாபா வாரணாசியில் கரோனா பாபா

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், மக்களிடையே ஒரு துண்டு பிரசுரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த துண்டு பிரசுரத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி, குணமாக்கும் மந்திரம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மந்திரம் பற்றி அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் என ஜோதிடர் ஒருவரின் பெயர் முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் சஞ்சய் திவாரி என்பதும், அப்பகுதியில் தன்னை பெரிய ஜோதிடராக காட்டிக் கொண்டு திரிபவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் (குற்றம்) மோஹித் யாதவ் கூறுகையில், “திவாரி மீது சட்ட ஒழுங்கை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், மக்களிடையே ஒரு துண்டு பிரசுரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த துண்டு பிரசுரத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி, குணமாக்கும் மந்திரம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மந்திரம் பற்றி அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் என ஜோதிடர் ஒருவரின் பெயர் முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் சஞ்சய் திவாரி என்பதும், அப்பகுதியில் தன்னை பெரிய ஜோதிடராக காட்டிக் கொண்டு திரிபவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் (குற்றம்) மோஹித் யாதவ் கூறுகையில், “திவாரி மீது சட்ட ஒழுங்கை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.