தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அம்மாநிலத்தில் காற்று மாசுபாடு என்பது சவாலான விஷயமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'தீபாவளி அன்று டெல்லியில் 24 இடங்களில் காற்று மாசு அளவுகளை அரசு துல்லியமாக அளவீடு செய்தது. அதன் முடிவுகளின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்திருக்கிறது.