ETV Bharat / bharat

தேசியப் பாதுகாப்பு தொடர்பான மாணவர்களின் புத்தகத்தை வெளியிட்ட நரவனே

author img

By

Published : Aug 27, 2020, 7:27 PM IST

டெல்லி : தேசியப் பாதுகாப்பு குறித்த பல்கலைகழக மாணவர்களின் புத்தகத்தை ராணுவத் தளபதி முகுந்த் நரவனே வெளியிட்டார்.

army-chief-unveils-book-by-students-on-national-security
army-chief-unveils-book-by-students-on-national-security

ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "தேசிய பாதுகாப்பு சவால்கள் : இளம் அறிஞர்களின் பார்வை" என்ற புத்தகத்தை இன்று (ஆக. 27) வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை ஆர்மி திங்க்-டேங்க் சென்டர் ஃபார் லேண்ட் வார்ஃபேர் ஸ்டடீஸ் (CLAWS) பிரசுரித்துள்ளது.

ஆசிரியர்கள், இளங்கலை நிலை முதல் முனைவர் பட்டதாரிகள் வரையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தேசியப் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருப்பொருள்களில் இப்புத்தகத்தில் எழுதியுள்ளனர். மேலும், இந்தப் புத்தகம் வங்க தேச விடுதலையின் விளைவாக 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் போரில் இறந்த, பீல்ட் மார்ஷல் மானேக்ஷாவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

இந்தப் புத்தகம் 2018-2019ஆம் ஆண்டு எஃப்.எம்.எம்.இ.சி விருது வென்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகம் கருத்தியல் புரிதல் மற்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பின் அம்சங்கள், தொழில்நுட்ப பரிணாமம், இணைய அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய அனுபவங்கள் போன்ற கருப்பொருள்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளம் ஆசிரியர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்துதற்காக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜத் தோவல், எம்.எம்.நரவனே ஆகியோர் குறித்த செய்திகளை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "தேசிய பாதுகாப்பு சவால்கள் : இளம் அறிஞர்களின் பார்வை" என்ற புத்தகத்தை இன்று (ஆக. 27) வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை ஆர்மி திங்க்-டேங்க் சென்டர் ஃபார் லேண்ட் வார்ஃபேர் ஸ்டடீஸ் (CLAWS) பிரசுரித்துள்ளது.

ஆசிரியர்கள், இளங்கலை நிலை முதல் முனைவர் பட்டதாரிகள் வரையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தேசியப் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருப்பொருள்களில் இப்புத்தகத்தில் எழுதியுள்ளனர். மேலும், இந்தப் புத்தகம் வங்க தேச விடுதலையின் விளைவாக 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் போரில் இறந்த, பீல்ட் மார்ஷல் மானேக்ஷாவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

இந்தப் புத்தகம் 2018-2019ஆம் ஆண்டு எஃப்.எம்.எம்.இ.சி விருது வென்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகம் கருத்தியல் புரிதல் மற்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பின் அம்சங்கள், தொழில்நுட்ப பரிணாமம், இணைய அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய அனுபவங்கள் போன்ற கருப்பொருள்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளம் ஆசிரியர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்துதற்காக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜத் தோவல், எம்.எம்.நரவனே ஆகியோர் குறித்த செய்திகளை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.