ETV Bharat / bharat

பாகிஸ்தானின் மற்றொரு ஆளில்லா குட்டி விமானம் பறிமுதல்!

author img

By

Published : Sep 28, 2019, 12:16 PM IST

பஞ்சாப்: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  பாகிஸ்தான் அனுப்பிய ஆளில்லா குட்டி விமானம் பஞ்சாப் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Punjab

காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்தத் தகவலையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானால் ஆயுதங்கள் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது. அதனைக் கண்டுபிடித்து பஞ்சாப் மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நான்கு பயங்கரவாதிகளிடமிருந்து ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இந்திய எல்லையைக் கடந்தால் அதனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பஞ்சாபில் ஏகே-47, கை வெடிகுண்டு பறிமுதல்; 4 பேர் கைது

காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்தத் தகவலையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானால் ஆயுதங்கள் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது. அதனைக் கண்டுபிடித்து பஞ்சாப் மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நான்கு பயங்கரவாதிகளிடமிருந்து ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இந்திய எல்லையைக் கடந்தால் அதனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பஞ்சாபில் ஏகே-47, கை வெடிகுண்டு பறிமுதல்; 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.