ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியின் உள்ளூர் பத்திரிகையாளர் கே. சத்யநாராயணா (45). இவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள எஸ். அனாவரம் கிராமத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி காவல் துறை தலைமை இயக்குநர் கௌதம் சுவாங்கிடம் (Gautam Sawang) உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்குமாறு, கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அட்னன் நயீம் அஸ்மிக்கு (Adnan Nayeem Asmi) உத்தரவிட்டப்பட்டதின் பேரில், காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:
ராஜிவ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: சீமான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு