மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து ஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவை அம்மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற பகுதிகளில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது குறித்து எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் மதுபானக் கடைகளை அரசு திறக்க முயற்சித்தால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.