ETV Bharat / bharat

ஹரியானா கல்லூரி மாணவி கொலை வழக்கு: 14 நாள்கள் நீதிமன்ற காவலில் மூன்று குற்றவாளிகள்!

author img

By

Published : Oct 30, 2020, 3:41 PM IST

சண்டிகர்: ஹரியானா கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான மூன்று நபர்களும், 14 நாள்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

arihari
ari

ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லப்கர் என்ற பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து ஒரு பெண் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார். அப்போது காரில் வந்த 2 பேர் அம்மாணவியை கடத்த முயன்றனர். உடனடியாக சுதாரித்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பினர். சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிய மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான குருகிராமில் வசிக்கும் தவுசிப், நுஹிலில் வசிக்கும் ரெஹான் ஆகிய இருவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு துப்பாக்கி வழங்கிய குற்றத்திற்காக நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூ என்பவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லப்கர் என்ற பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து ஒரு பெண் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார். அப்போது காரில் வந்த 2 பேர் அம்மாணவியை கடத்த முயன்றனர். உடனடியாக சுதாரித்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பினர். சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிய மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான குருகிராமில் வசிக்கும் தவுசிப், நுஹிலில் வசிக்கும் ரெஹான் ஆகிய இருவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு துப்பாக்கி வழங்கிய குற்றத்திற்காக நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூ என்பவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.