ETV Bharat / bharat

சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள்...!

author img

By

Published : May 19, 2020, 3:07 PM IST

ராய்ப்பூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

22000-migrants-return-to-cgarh-so-far-by-shramik-spl-trains
22000-migrants-return-to-cgarh-so-far-by-shramik-spl-trains

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. கையில் பணமின்றி சாலை வழியாக நடை பயணமாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர்.

இதையடுத்து வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரையும் மீட்க மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நேற்று வரை சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''மே 10ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சத்தீஸ்கருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 15 சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதுவரை சொந்த ஊர் அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்ட இணையதளத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 867 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 2 லட்சத்து 73 ஆயிரத்து 935 பேர் பதிவு செய்துள்ளனர்.

வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக பல்வேறு மாநிலங்களுடன் பேசி, இதுவரை 45 சிறப்பு ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக, மாநில அரசு சார்பாக ரயில்வே துறைக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களைத் தவிர்த்து சொந்த வாகனங்களிலும், நடை பயணமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. கையில் பணமின்றி சாலை வழியாக நடை பயணமாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர்.

இதையடுத்து வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரையும் மீட்க மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நேற்று வரை சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''மே 10ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சத்தீஸ்கருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 15 சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதுவரை சொந்த ஊர் அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்ட இணையதளத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 867 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 2 லட்சத்து 73 ஆயிரத்து 935 பேர் பதிவு செய்துள்ளனர்.

வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக பல்வேறு மாநிலங்களுடன் பேசி, இதுவரை 45 சிறப்பு ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக, மாநில அரசு சார்பாக ரயில்வே துறைக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களைத் தவிர்த்து சொந்த வாகனங்களிலும், நடை பயணமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.