ETV Bharat / bharat

புகைப்பிடிக்க கட்டாயப்படுத்திய ரூம்மேட் - மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை! - விடுதியில் தற்கொலை

மும்பை: ரூம்மேட் புகைபிடிக்க கட்டாயப்படுத்தியதால் 18 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

youth commits suicide
youth commits suicide
author img

By

Published : Oct 16, 2020, 3:00 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் கார்வே நகரில் உள்ள ஆண்கள் விடுதி ஒன்றில் சாகர் அசோக் பவார்(18) என்பவர் லக்ஷ்மன் பட்டில்(30) என்பவருடன் ரூம்மேட்டாக தங்கி உள்ளார்.

அதில் லக்ஷ்மன் பட்டில் அசோக் பவாரை புகைப்பிடிக்க வேண்டும் என பல நாள்களாக வற்புறுத்தி வந்துள்ளார்.

அதனால் மன உளைச்சல் அடைந்த அசோக் பவார் தூக்குமாட்டிக் கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் லக்ஷ்மன் பட்டிலை கைது செய்தனர்.

இது குறித்து காவலர்கள், "தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லக்ஷ்மன் பட்டில், அசோக் பவாரை அக்.10-13ஆம் தேதிகளில் புகைப்பிடிக்குமாறு வற்புறுத்தி மிரட்டி உள்ளார். அதில் பயந்துபோன இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விவசாயி தூக்கிட்டு தற்கொலை: காவலர்கள் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலம் கார்வே நகரில் உள்ள ஆண்கள் விடுதி ஒன்றில் சாகர் அசோக் பவார்(18) என்பவர் லக்ஷ்மன் பட்டில்(30) என்பவருடன் ரூம்மேட்டாக தங்கி உள்ளார்.

அதில் லக்ஷ்மன் பட்டில் அசோக் பவாரை புகைப்பிடிக்க வேண்டும் என பல நாள்களாக வற்புறுத்தி வந்துள்ளார்.

அதனால் மன உளைச்சல் அடைந்த அசோக் பவார் தூக்குமாட்டிக் கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் லக்ஷ்மன் பட்டிலை கைது செய்தனர்.

இது குறித்து காவலர்கள், "தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லக்ஷ்மன் பட்டில், அசோக் பவாரை அக்.10-13ஆம் தேதிகளில் புகைப்பிடிக்குமாறு வற்புறுத்தி மிரட்டி உள்ளார். அதில் பயந்துபோன இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விவசாயி தூக்கிட்டு தற்கொலை: காவலர்கள் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.