ETV Bharat / bharat

சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 4, 2019, 9:34 PM IST

கர்த்தூம்: சூடான் நாட்டில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sudan
Sudan

சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "விபத்து நடந்த ரசாயன ஆலைக்கு இந்தியத் தூதரக அலுவலர்கள் விரைந்துள்ளனர். கர்த்தூமில் நடந்த விபத்து குறித்த செய்தி இப்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வருத்தப்படுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "சூடானில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக அலுவலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

சூடான் தீ விபத்து

விபத்து நடந்த ஆலையில் 50 இந்தியர்களுக்கும் மேல் வேலை செய்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த கார்களின் மீதும் தீப்பற்றியதாக ஆலை ஊழியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

  • FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM

    contd... are as per lists given below, but some of the missing may be in the list of dead which we are still to receive as identification is not possible because of the bodies being burnt. pic.twitter.com/SmBu9usj6o

    — India in Sudan (@EoI_Khartoum) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM

    Reference trailing Advisory dated 03.12.2019 on the fire incident at the Seela Ceramic Factory, Bahri, Khartoum. As per latest reports, but so far not confirmed officially, 18 are dead. The status of others....contd..

    — India in Sudan (@EoI_Khartoum) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Have just received the tragic news of a major blast in a ceramic factory “Saloomi” in the Bahri area of the capital Khartoum in Sudan. Deeply grieved to learn that some Indian workers have lost their lives while some others have been seriously injured.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: சுதந்திர காற்றை சுவாசித்தார் சிதம்பரம்!

சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "விபத்து நடந்த ரசாயன ஆலைக்கு இந்தியத் தூதரக அலுவலர்கள் விரைந்துள்ளனர். கர்த்தூமில் நடந்த விபத்து குறித்த செய்தி இப்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வருத்தப்படுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "சூடானில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக அலுவலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

சூடான் தீ விபத்து

விபத்து நடந்த ஆலையில் 50 இந்தியர்களுக்கும் மேல் வேலை செய்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த கார்களின் மீதும் தீப்பற்றியதாக ஆலை ஊழியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

  • FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM

    contd... are as per lists given below, but some of the missing may be in the list of dead which we are still to receive as identification is not possible because of the bodies being burnt. pic.twitter.com/SmBu9usj6o

    — India in Sudan (@EoI_Khartoum) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM

    Reference trailing Advisory dated 03.12.2019 on the fire incident at the Seela Ceramic Factory, Bahri, Khartoum. As per latest reports, but so far not confirmed officially, 18 are dead. The status of others....contd..

    — India in Sudan (@EoI_Khartoum) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Have just received the tragic news of a major blast in a ceramic factory “Saloomi” in the Bahri area of the capital Khartoum in Sudan. Deeply grieved to learn that some Indian workers have lost their lives while some others have been seriously injured.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: சுதந்திர காற்றை சுவாசித்தார் சிதம்பரம்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.