அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.