ETV Bharat / bharat

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 144 சிறார்கள்: அதிர்ச்சி தகவல் - காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 144 சிறார்கள்

ஸ்ரீநகர்: காவல் துறையினரால் 144 சிறார்கள் சட்டவிரோதமாக கைது செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jammu
author img

By

Published : Oct 3, 2019, 12:22 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்து சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துவந்தது. பல பத்திரிகைகள் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக செய்திகள் வெளியிட்டுவந்தன.

முக்கியமாக, சிறார்களை காவல் துறையினர் கைது செய்துவைத்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்த இனாக்சி கங்குலி, சாந்தா ஆகியோர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குழந்தைகள் சட்டவிரோதமாக கைது செய்வது குறித்த அறிக்கையை ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஒன்பது வயது சிறுவன் உள்பட 144 சிறார்களை காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரை தவிர மற்ற அனைவரும் அன்றே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்து சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துவந்தது. பல பத்திரிகைகள் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக செய்திகள் வெளியிட்டுவந்தன.

முக்கியமாக, சிறார்களை காவல் துறையினர் கைது செய்துவைத்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்த இனாக்சி கங்குலி, சாந்தா ஆகியோர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குழந்தைகள் சட்டவிரோதமாக கைது செய்வது குறித்த அறிக்கையை ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஒன்பது வயது சிறுவன் உள்பட 144 சிறார்களை காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரை தவிர மற்ற அனைவரும் அன்றே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.