ETV Bharat / bharat

இரண்டு மருத்துவக் காப்பீடுகளை ஒரே நேரத்தில் க்ளைம் செய்ய நேரிட்டால்?

author img

By

Published : Jan 10, 2023, 7:29 PM IST

இரண்டு மருத்துவக் காப்பீடுகளை ஒரே நேரத்தில் க்ளைம் செய்ய நேரிட்டால் கவனத்துடன் இருக்க வேண்டும். இரு காப்பீடுகளின் பயன்களையும் அறிந்து வைத்திருந்தால், எதை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்யலாம்.

claims
claims

ஹைதராபாத்: கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் பெருமளவுக்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால், இன்றளவும் மருத்துவக் காப்பீடுகளை சரியாக எந்தவித சிக்கலும் இன்றி எப்படி பயன்படுத்துவது? எப்படி க்ளைம் செய்வது? என்பதில் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதுகுறித்த சில பயனுள்ள தகவல்களைப் பார்க்கலாம்...

ஏராளமானோர் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீடுகளை எடுக்கின்றனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ஒரு காப்பீட்டை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், மருத்துவ அவசர காலங்களில் எந்த காப்பீட்டை முதலில் பயன்படுத்துவது? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவக் காப்பீடுகளை க்ளைம் செய்வது சட்டப்படி குற்றம். அதனால், ஒரே நேரத்தில் இரு காப்பீடுகளை க்ளைம் செய்யக்கூடாது. முதலில் ஒரு பாலிசியை க்ளைம் செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான தொகை, அந்த காப்பீட்டுத் தொகையை மீறி சென்றால், இரண்டாவது பாலிசியைப் பயன்படுத்த வேண்டும்.

சான்றாக, உங்கள் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கிய நிலையில், நீங்கள் தனிப்பட்ட முறையில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளதாக கருத்தில் கொள்வோம். இந்த சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு 8 லட்சம் ரூபாய் தேவைப்பட்டால், முதலில் அலுவலகத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்துவிட்டு, பிறகு உங்களது தனிப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்யலாம்.

எப்படி க்ளைம் செய்வது? மருத்துவமனைகளில் ஒரு மருத்துவக் காப்பீட்டை மட்டுமே க்ளைம் செய்ய அனுமதி உள்ளது. மீதமுள்ள தொகையை சிறிது காலத்திற்குப் பிறகு இரண்டாவது காப்பீட்டின் மூலம் க்ளைம் செய்யலாம். உங்களது மருத்துவ செலவு முதல் காப்பீட்டுத் தொகையை மீறிச் செல்லும்போதுதான் சிக்கல்.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், முதலில் மருத்துவமனை வழங்கிய அசல் பில்களை நகலெடுத்து மருத்துவமனையிடம் அட்டஸ்டெட் வாங்கி, இரண்டையும் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்நிறுவனம் கூடுதலாக உள்ள காப்பீட்டுத் தொகை குறித்து இரண்டாவது காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பும்.

அதன் பிறகு, இரண்டாவது காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி க்ளைம் செய்யலாம். இந்த நடைமுறை காப்பீட்டுக்கு ஏற்றார்போல் மாறக்கூடும். அதனால், க்ளைம் செய்வதற்கு முன்பாக, உங்களது காப்பீட்டு நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கேட்டறிய வேண்டும்.

அதேபோல், அலுவலகம் வழங்கிய காப்பீடு, தனிப்பட்ட காப்பீடு ஆகிய இரண்டில் எதை முதலில் பயன்படுத்த வேண்டும்? என்பது சூழ்நிலைகளை சார்ந்தது. பெரும்பாலும் அலுவலகங்களில் வழங்கப்படும் காப்பீடுகளில் க்ளைம் போனஸ் போன்றவை இருக்காது, அதனால் முடிந்த அளவிற்கு அலுவலகங்களில் வழங்கப்படும் காப்பீட்டை முதலில் பயன்படுத்த வேண்டும்.

சில தனிப்பட்ட காப்பீடுகளில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்த முடியும். ஆனால், அலுவலகங்களில் வழங்கப்படும் குரூப் பாலிசிகளில் இதுபோன்ற கால அளவு ஏதும் இருக்காது. அதனால், அலுவலகம் வழங்கும் காப்பீட்டை முதலில் பயன்படுத்தலாம். எந்த மருத்துவக் காப்பீடு அதிகளவு பயன் தரும் என்பதை அறிந்து கொண்டால், அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

இதையும் படிங்க: புதிய ஆண்டில் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம்

ஹைதராபாத்: கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் பெருமளவுக்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால், இன்றளவும் மருத்துவக் காப்பீடுகளை சரியாக எந்தவித சிக்கலும் இன்றி எப்படி பயன்படுத்துவது? எப்படி க்ளைம் செய்வது? என்பதில் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதுகுறித்த சில பயனுள்ள தகவல்களைப் பார்க்கலாம்...

ஏராளமானோர் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீடுகளை எடுக்கின்றனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ஒரு காப்பீட்டை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், மருத்துவ அவசர காலங்களில் எந்த காப்பீட்டை முதலில் பயன்படுத்துவது? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவக் காப்பீடுகளை க்ளைம் செய்வது சட்டப்படி குற்றம். அதனால், ஒரே நேரத்தில் இரு காப்பீடுகளை க்ளைம் செய்யக்கூடாது. முதலில் ஒரு பாலிசியை க்ளைம் செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான தொகை, அந்த காப்பீட்டுத் தொகையை மீறி சென்றால், இரண்டாவது பாலிசியைப் பயன்படுத்த வேண்டும்.

சான்றாக, உங்கள் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கிய நிலையில், நீங்கள் தனிப்பட்ட முறையில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளதாக கருத்தில் கொள்வோம். இந்த சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு 8 லட்சம் ரூபாய் தேவைப்பட்டால், முதலில் அலுவலகத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்துவிட்டு, பிறகு உங்களது தனிப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்யலாம்.

எப்படி க்ளைம் செய்வது? மருத்துவமனைகளில் ஒரு மருத்துவக் காப்பீட்டை மட்டுமே க்ளைம் செய்ய அனுமதி உள்ளது. மீதமுள்ள தொகையை சிறிது காலத்திற்குப் பிறகு இரண்டாவது காப்பீட்டின் மூலம் க்ளைம் செய்யலாம். உங்களது மருத்துவ செலவு முதல் காப்பீட்டுத் தொகையை மீறிச் செல்லும்போதுதான் சிக்கல்.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், முதலில் மருத்துவமனை வழங்கிய அசல் பில்களை நகலெடுத்து மருத்துவமனையிடம் அட்டஸ்டெட் வாங்கி, இரண்டையும் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்நிறுவனம் கூடுதலாக உள்ள காப்பீட்டுத் தொகை குறித்து இரண்டாவது காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பும்.

அதன் பிறகு, இரண்டாவது காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி க்ளைம் செய்யலாம். இந்த நடைமுறை காப்பீட்டுக்கு ஏற்றார்போல் மாறக்கூடும். அதனால், க்ளைம் செய்வதற்கு முன்பாக, உங்களது காப்பீட்டு நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கேட்டறிய வேண்டும்.

அதேபோல், அலுவலகம் வழங்கிய காப்பீடு, தனிப்பட்ட காப்பீடு ஆகிய இரண்டில் எதை முதலில் பயன்படுத்த வேண்டும்? என்பது சூழ்நிலைகளை சார்ந்தது. பெரும்பாலும் அலுவலகங்களில் வழங்கப்படும் காப்பீடுகளில் க்ளைம் போனஸ் போன்றவை இருக்காது, அதனால் முடிந்த அளவிற்கு அலுவலகங்களில் வழங்கப்படும் காப்பீட்டை முதலில் பயன்படுத்த வேண்டும்.

சில தனிப்பட்ட காப்பீடுகளில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்த முடியும். ஆனால், அலுவலகங்களில் வழங்கப்படும் குரூப் பாலிசிகளில் இதுபோன்ற கால அளவு ஏதும் இருக்காது. அதனால், அலுவலகம் வழங்கும் காப்பீட்டை முதலில் பயன்படுத்தலாம். எந்த மருத்துவக் காப்பீடு அதிகளவு பயன் தரும் என்பதை அறிந்து கொண்டால், அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

இதையும் படிங்க: புதிய ஆண்டில் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.