டெல்லி: நடிகை அலியா பட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அவரின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"அனைவருக்கும் வணக்கம், எனக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் உடனடியாக என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின்கீழ் அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்று அலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில், பிரபலங்களான பரேஷ் ராவல், கார்த்திக் ஆரியன், ரன்பீர் கபூர், ரோஹித் சரஃப் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!