முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார். இந்தநிலையில், இன்று (ஜூன் 1) கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், "நான் கிரிக்கெட் பயணத்தில் இணைந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த பயணம் நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. இதில் என்னுடன் இருந்து அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்து வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளேன். இது பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களது இந்த ஆதரவு தொடர்ந்து தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கும் கங்குலி: என்னவாக இருக்கும்?
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஜெய்ஷா விளக்கமளித்துள்ளார்.
கங்குலியின் இந்த பதிவையடுத்து, அவரது ரசிகர்கள் எனப் பலரும் பிசிசிஐ தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யப்போவதாக கருத்து பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதனை மறுத்து, கங்குலி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை வழங்கிய இந்தியா!
முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார். இந்தநிலையில், இன்று (ஜூன் 1) கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், "நான் கிரிக்கெட் பயணத்தில் இணைந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த பயணம் நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. இதில் என்னுடன் இருந்து அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்து வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளேன். இது பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களது இந்த ஆதரவு தொடர்ந்து தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
கங்குலியின் இந்த பதிவையடுத்து, அவரது ரசிகர்கள் எனப் பலரும் பிசிசிஐ தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யப்போவதாக கருத்து பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதனை மறுத்து, கங்குலி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை வழங்கிய இந்தியா!