ETV Bharat / bharat

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 11, 2022, 1:11 PM IST

கேரளாவில் பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்

Etv Bharatகேரளாவில் பாம்புபடகு கவிழ்ந்து விபத்து -  2 பேர் உயிரிழப்பு
Etv Bharatகேரளாவில் பாம்புபடகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ஆலப்புலா: கேரளா மாநிலம் சென்னிதலா அருகே அச்சன்கோவில் ஆற்றில் 'பள்ளியோடம்' என்ற பாம்புப் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணி நடந்துவருகிறது. உயிரிழந்தவர்கள் ஆதித்தன் (17) மற்றும் வினீஷ் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரண்முலா ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே பம்பை ஆற்றில் இன்று (செப்-11) நடைபெறவிருந்த படகுப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளியோடம் என்ற படகில் 60 பேர் பயணம் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து

பெரும்பாலான துடுப்பு வீரர்கள் நீந்திப் பாதுகாப்பாக கரைக்குச் சென்றனர். மூன்று பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களில் 2 பேரின் உடல் மீட்டக்கப்பட்டது. பொதுவாக ஒரு பாம்பு படகில் 50 துடுப்பு வீரர்கள் இருக்க வேண்டும். இந்த படகில் கூடுதலாக 10 பேர் ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!

ஆலப்புலா: கேரளா மாநிலம் சென்னிதலா அருகே அச்சன்கோவில் ஆற்றில் 'பள்ளியோடம்' என்ற பாம்புப் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணி நடந்துவருகிறது. உயிரிழந்தவர்கள் ஆதித்தன் (17) மற்றும் வினீஷ் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரண்முலா ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே பம்பை ஆற்றில் இன்று (செப்-11) நடைபெறவிருந்த படகுப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளியோடம் என்ற படகில் 60 பேர் பயணம் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து

பெரும்பாலான துடுப்பு வீரர்கள் நீந்திப் பாதுகாப்பாக கரைக்குச் சென்றனர். மூன்று பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களில் 2 பேரின் உடல் மீட்டக்கப்பட்டது. பொதுவாக ஒரு பாம்பு படகில் 50 துடுப்பு வீரர்கள் இருக்க வேண்டும். இந்த படகில் கூடுதலாக 10 பேர் ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.