ETV Bharat / bharat

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17% அதிகரிப்பு

author img

By

Published : Aug 7, 2022, 4:55 PM IST

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதி வரை ஆயிரத்து 100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rape
rape

டெல்லியில் ஜனவரி 24ஆம் தேதி, 8 வயது சிறுமி இரண்டு சிறுவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த மே 18ஆம் தேதி 13 வயது சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். டெல்லியில் இதுபோன்ற ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறித்து டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

அதன்படி, "2022ஆம் ஆண்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதி வரை, ஆயிரத்து 100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 33 ஆக இருந்தது. இந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் 6 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை, பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக 2 ஆயிரத்து 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆயிரத்து 880 ஆக இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் 3 ஆயிரத்து 758 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவர் மற்றும் குடும்பத்தினரால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பான வழக்குகள் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்த ஆண்டு 2 ஆயிரத்து 704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வரதட்சணை கொடுமையால் 69 பெண்கள் உயிரிழந்துள்ளனர், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 72 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6 ஆயிரத்து 747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 7 ஆயிரத்து 887ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, டெல்லியில் இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு தர்ம அடி

டெல்லியில் ஜனவரி 24ஆம் தேதி, 8 வயது சிறுமி இரண்டு சிறுவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த மே 18ஆம் தேதி 13 வயது சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். டெல்லியில் இதுபோன்ற ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறித்து டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

அதன்படி, "2022ஆம் ஆண்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதி வரை, ஆயிரத்து 100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 33 ஆக இருந்தது. இந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் 6 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை, பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக 2 ஆயிரத்து 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆயிரத்து 880 ஆக இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் 3 ஆயிரத்து 758 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவர் மற்றும் குடும்பத்தினரால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பான வழக்குகள் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்த ஆண்டு 2 ஆயிரத்து 704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வரதட்சணை கொடுமையால் 69 பெண்கள் உயிரிழந்துள்ளனர், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 72 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6 ஆயிரத்து 747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 7 ஆயிரத்து 887ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, டெல்லியில் இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு தர்ம அடி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.