ETV Bharat / snippets

கும்பகோணம் - பெங்களூரு SETC AC பேருந்தில் ஏசி பழுது.. 2 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 10:40 PM IST

தாமதமான எஸ்இடிசி ஏசி பேருந்து
தாமதமான எஸ்இடிசி ஏசி பேருந்து (Credits- ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை 6.35 மணிக்கு பெங்களுரூ புறப்பட வேண்டிய விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் திடீரென ஏசி வேலை செய்யவில்லை. இவ்வாறு ஏசியில் ஏற்பட்ட பழுதால் இரவு 8 மணி வரை பேருந்து புறப்படாமல் இருந்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர். அது குறித்து நடத்துநர், ஓட்டுநர் கும்பகோணம் பணிமனைக்கு தகவல் கொடுத்தும் சரி செய்ய ஒருவரும் வரவில்லை என கூறப்படுகிறது. அதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் பயணிகளுடன் நடத்துநரும், ஓட்டுநரும் சேர்ந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இரவு 8.45 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மற்றொரு ஏசி ஸ்பேர் பேருந்து வந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக பேருந்து பெங்களூருக்கு பயணத்தைத் தொடங்குகிறது.

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை 6.35 மணிக்கு பெங்களுரூ புறப்பட வேண்டிய விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் திடீரென ஏசி வேலை செய்யவில்லை. இவ்வாறு ஏசியில் ஏற்பட்ட பழுதால் இரவு 8 மணி வரை பேருந்து புறப்படாமல் இருந்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர். அது குறித்து நடத்துநர், ஓட்டுநர் கும்பகோணம் பணிமனைக்கு தகவல் கொடுத்தும் சரி செய்ய ஒருவரும் வரவில்லை என கூறப்படுகிறது. அதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் பயணிகளுடன் நடத்துநரும், ஓட்டுநரும் சேர்ந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இரவு 8.45 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மற்றொரு ஏசி ஸ்பேர் பேருந்து வந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக பேருந்து பெங்களூருக்கு பயணத்தைத் தொடங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.