கோயம்புத்தூர்: பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே நேற்று (ஆக.20) காலை கோவை வந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்துவதாக விமான நிலைய உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்ததில், சந்தேகத்திற்கிடமாக Corn flakes பாக்கெட்டில் பச்சை நிறப் பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பின் அதை ஆய்வு செய்த அதிகாரிகள், அது போதைப் பொருள் என உறுதிப்படுத்திய நிலையில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புடைய 2,002 கிராம் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தி வரப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.