ETV Bharat / snippets

திருப்பத்தூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 1:06 PM IST

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சியம்மாள். இவர் தன்னுடய குடும்ப உறுப்பினர்கள் 7 பேருடன் பெங்களூருவில் இருந்து காரில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுக் கொண்டு இருந்தார்.

கார், வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியுள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூதாட்டி காமாட்சி (76) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மற்ற 7 பேர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சியம்மாள். இவர் தன்னுடய குடும்ப உறுப்பினர்கள் 7 பேருடன் பெங்களூருவில் இருந்து காரில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுக் கொண்டு இருந்தார்.

கார், வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியுள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூதாட்டி காமாட்சி (76) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மற்ற 7 பேர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.