ETV Bharat / snippets

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 6:39 PM IST

சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் முழுக் கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில், அணையில் தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பின் காரணமாக தற்போது சாத்தனூர் அணைக்கு 2,220 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

ஏற்கனவே, கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு தற்போது 3 மணி நிலவரப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் முழுக் கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில், அணையில் தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பின் காரணமாக தற்போது சாத்தனூர் அணைக்கு 2,220 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

ஏற்கனவே, கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு தற்போது 3 மணி நிலவரப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.