ETV Bharat / snippets

வலிப்பு ஏற்பட்டதால் தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ.. சென்னை சாலையில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 9:55 PM IST

Auto
விபத்துக்குள்ளான ஆட்டோ (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் மேம்பாலத்தின் மீது கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ராயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆட்டோ ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை மேம்பாலத்தின் நடுவே உள்ள சுவரின் மீது மோதியதில் ஆட்டோ தலைகுப்புற விழுந்தது. இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவை புரட்டி போட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டனர்.

பின்னர், அவ்வழியாகச் சென்ற ராயபுரத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பெண் மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சிறிதி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் மேம்பாலத்தின் மீது கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ராயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆட்டோ ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை மேம்பாலத்தின் நடுவே உள்ள சுவரின் மீது மோதியதில் ஆட்டோ தலைகுப்புற விழுந்தது. இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவை புரட்டி போட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டனர்.

பின்னர், அவ்வழியாகச் சென்ற ராயபுரத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பெண் மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சிறிதி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.