சென்னை: அண்மைக்காலமாக துணைவேந்தர் பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டு வருகிறார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆகியோருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அடுத்த மாதம் ஓய்வு.. பதவிக்காலம் நீட்டிப்பா?
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jul 5, 2024, 5:27 PM IST
![அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அடுத்த மாதம் ஓய்வு.. பதவிக்காலம் நீட்டிப்பா? ANNA UNIVERSITY VC VELRAJ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-07-2024/1200-675-21877236-thumbnail-16x9-cheeeee.jpg?imwidth=3840)
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஆகஸ்ட் மாதம் ஒய்வு பெற உள்ளார். துணைவேந்தர் பதவியில் இருந்து அடுத்த மாதம் ஓய்வு பெற்றாலும், இன்னும் ஒரு ஆண்டு அவருக்கு பணிக்காலம் உள்ளதால் துணைவேந்தர் பதவியில் இருந்து, அவருடைய எரிசக்தி துறைக்கு பேராசிரியராக செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.
சென்னை: அண்மைக்காலமாக துணைவேந்தர் பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டு வருகிறார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆகியோருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஆகஸ்ட் மாதம் ஒய்வு பெற உள்ளார். துணைவேந்தர் பதவியில் இருந்து அடுத்த மாதம் ஓய்வு பெற்றாலும், இன்னும் ஒரு ஆண்டு அவருக்கு பணிக்காலம் உள்ளதால் துணைவேந்தர் பதவியில் இருந்து, அவருடைய எரிசக்தி துறைக்கு பேராசிரியராக செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.