ETV Bharat / snippets

தேனி கடமலை அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:54 PM IST

Land
விவசாய நிலம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலை - மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னம்படுகை கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பாண்டி (35). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று தேனி மாவட்டம் முழுவதும் மாலையில் இருந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

அப்போது மாலை நேரத்தில் விவசாயத் தோட்டத்தில் ஆடு மாடுகளை பராமரித்து வந்திருந்த செல்லப்பாண்டி, திடீரென எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார், உயிரிழந்த செல்லப்பாண்டியின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலை - மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னம்படுகை கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பாண்டி (35). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று தேனி மாவட்டம் முழுவதும் மாலையில் இருந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

அப்போது மாலை நேரத்தில் விவசாயத் தோட்டத்தில் ஆடு மாடுகளை பராமரித்து வந்திருந்த செல்லப்பாண்டி, திடீரென எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார், உயிரிழந்த செல்லப்பாண்டியின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.