ETV Bharat / state

சென்னை - இலங்கை விமான சேவை முழுவதும் இன்று ரத்து.. காரணம் என்ன? - CHENNAI to SRILANKA FLIGHT CANCEL

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 2:54 PM IST

Chennai-Srilanka flight cancel: சென்னை-இலங்கை-சென்னை இடையே இயக்கப்படும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

chennai airport
chennai airport (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல்‌, மாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும். இதேபோல், தினமும் இயக்கப்படும் இலங்கை-சென்னை 2 வருகை விமானங்கள் சென்னை-இலங்கை 2 புறப்பபாடு விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் இன்று (ஜூன்26) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்றவைகளுக்குச் செல்லும் டிரான்சிட் பயணிகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று திடீரென இந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நிர்வாக காரணங்களால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: "தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்" - எச்சரிக்கையை விடுத்த வானிலை ஆய்வு மையம்! - Orange Alert IN TN

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல்‌, மாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும். இதேபோல், தினமும் இயக்கப்படும் இலங்கை-சென்னை 2 வருகை விமானங்கள் சென்னை-இலங்கை 2 புறப்பபாடு விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் இன்று (ஜூன்26) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்றவைகளுக்குச் செல்லும் டிரான்சிட் பயணிகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று திடீரென இந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நிர்வாக காரணங்களால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: "தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்" - எச்சரிக்கையை விடுத்த வானிலை ஆய்வு மையம்! - Orange Alert IN TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.