ETV Bharat / state

2024 மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுத்த வேட்பாளர்கள்.. முழு விவரம்! - Tough Compete for DMK Candidates

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 7:48 PM IST

Tamil Nadu Election Result 2024: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாமக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தனர். இருப்பினும், இறுதியில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

விஜய பிரபாகரன், செளமியா அன்புமணி, மற்றும் அண்ணாமலை புகைப்படம்
விஜய பிரபாகரன், செளமியா அன்புமணி, மற்றும் அண்ணாமலை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி தென்னிந்தியாவின் பலமான கூட்டணியாக வலம் வருகிறது. இந்த தேர்தலில் திமுகவிற்கு சவால் நிறைந்த தொகுதியாக தமிழகத்தில் சில தொகுதிகள் இருந்தது. அதிலும் குறிப்பாக, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சவால் நிறைந்த தொகுதிகளாக இருந்தது. அவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

விருதுநகர் தொகுதி: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் களத்திலிருந்தனர். இதில் பாஜக வேட்பாளர் ராதிகா சவால் நிறைந்த போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான மாணிக்கம் தாகூருக்கு கடைசி சுற்று வரை கடும் போட்டி கொடுக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை அமைந்தது. கடைசி சுற்று வரை யார் வெற்றி பெறுவார் என்ற இழுபறி நீடித்தது, இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தருமபுரி தொகுதி: வேட்பாளர் அறிவிக்கப்பட்ட முதலே திமுகவிற்கு வெற்றி கேள்விக்குறியாக பார்க்கப்பட்ட தொகுதியாகவே தர்மபுரி தொகுதி இருந்தது. ஏனென்றால், அத்தொகுதியில் பாஜக கூட்டணியான பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டார்.

தருமபுரி தொகுதியில் கணிசமான வாக்குகளை வைத்துள்ள பாமகவிற்கு வெற்றி பெறும் தொகுதியாகவே இருந்தது. பிரச்சாரங்களில் ஈடுபடும் போது சௌமியா அன்புமணி தன் மகள்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களைக் கவர்ந்தது. அதேபோல், திமுக வேட்பாளர் மணி தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போல் பிரபலமாக இல்லை என்பது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. கருத்துக் கணிப்பு முடிவுகளுமே சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டது.

அதன்படியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து சுற்றுகளிலுமே சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளில் திமுக வேட்பாளர் மணி அதிக வாக்குகளைப் பெற்றதால், சௌமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியுற்று திமுக வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த முறையும் தருமபுரி தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.

கோயம்புத்தூர் தொகுதி: தமிழக தேர்தலில் கோயம்புத்தூரில் தொகுதியும் முக்கிய கவனம் பெற்றது. அதற்கு காரணம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பின், அவருடன் எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் கோயம்புத்தூரில் கணபதி ராஜ்குமார் திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், கோயம்புத்தூர் தொகுதி பாஜகவுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்பட்டது. காரணம், கோவை தொகுதியைப் பொறுத்தவரையில் ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்று இருக்கிறார். எனவே, பாஜகவுக்கு ஆதரவான வாக்குகள் கோவை தொகுதியில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கோவை தொகுதியில் பிரதமர் மோடியும் பிரச்சாரங்களிலும், ரோட் ஷோக்களிலும் ஈடுபட்டார்.

அதேபோல், வேட்பாளர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியினரும், நிர்வாகிகளும் பல கட்ட பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். வெற்றி பெறுவார் என கட்சியினரிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் (வாக்குகள் 5,68,200) 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, இரண்டாம் இடத்தை அடைந்தார்.

நாமக்கல் தொகுதி: நாமக்கல் தொகுதியும் திமுகவுக்கு (கூட்டணி) கடும் போட்டியாகவே இருந்தது. தேர்தல் முடிவுகள் கடைசிவரை இழுபறியாகவே சென்றது. திமுக கூட்டணியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கும், அதிமுகவின் வேட்பாளர் தமிழ்மணிக்கும் கடுமையான போட்டி நிலவியது.

கடைசி கட்டம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாத நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னுக்குப் பின் மாறி மாறி முன்னிலை வகித்திருந்தனர். கடைசி இரண்டு சுற்றுகளில் திமுகவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்து 112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட பல தொகுதியில் எதிர் வேட்பாளர்கள் கடும் போட்டி கொடுத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி... டெபாசிட் இழந்த தொகுதிகள் முழு விவரம்!

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி தென்னிந்தியாவின் பலமான கூட்டணியாக வலம் வருகிறது. இந்த தேர்தலில் திமுகவிற்கு சவால் நிறைந்த தொகுதியாக தமிழகத்தில் சில தொகுதிகள் இருந்தது. அதிலும் குறிப்பாக, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு சவால் நிறைந்த தொகுதிகளாக இருந்தது. அவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

விருதுநகர் தொகுதி: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் களத்திலிருந்தனர். இதில் பாஜக வேட்பாளர் ராதிகா சவால் நிறைந்த போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான மாணிக்கம் தாகூருக்கு கடைசி சுற்று வரை கடும் போட்டி கொடுக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை அமைந்தது. கடைசி சுற்று வரை யார் வெற்றி பெறுவார் என்ற இழுபறி நீடித்தது, இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தருமபுரி தொகுதி: வேட்பாளர் அறிவிக்கப்பட்ட முதலே திமுகவிற்கு வெற்றி கேள்விக்குறியாக பார்க்கப்பட்ட தொகுதியாகவே தர்மபுரி தொகுதி இருந்தது. ஏனென்றால், அத்தொகுதியில் பாஜக கூட்டணியான பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டார்.

தருமபுரி தொகுதியில் கணிசமான வாக்குகளை வைத்துள்ள பாமகவிற்கு வெற்றி பெறும் தொகுதியாகவே இருந்தது. பிரச்சாரங்களில் ஈடுபடும் போது சௌமியா அன்புமணி தன் மகள்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களைக் கவர்ந்தது. அதேபோல், திமுக வேட்பாளர் மணி தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போல் பிரபலமாக இல்லை என்பது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. கருத்துக் கணிப்பு முடிவுகளுமே சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டது.

அதன்படியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து சுற்றுகளிலுமே சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகளில் திமுக வேட்பாளர் மணி அதிக வாக்குகளைப் பெற்றதால், சௌமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியுற்று திமுக வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த முறையும் தருமபுரி தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.

கோயம்புத்தூர் தொகுதி: தமிழக தேர்தலில் கோயம்புத்தூரில் தொகுதியும் முக்கிய கவனம் பெற்றது. அதற்கு காரணம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பின், அவருடன் எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் கோயம்புத்தூரில் கணபதி ராஜ்குமார் திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், கோயம்புத்தூர் தொகுதி பாஜகவுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்பட்டது. காரணம், கோவை தொகுதியைப் பொறுத்தவரையில் ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்று இருக்கிறார். எனவே, பாஜகவுக்கு ஆதரவான வாக்குகள் கோவை தொகுதியில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கோவை தொகுதியில் பிரதமர் மோடியும் பிரச்சாரங்களிலும், ரோட் ஷோக்களிலும் ஈடுபட்டார்.

அதேபோல், வேட்பாளர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியினரும், நிர்வாகிகளும் பல கட்ட பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். வெற்றி பெறுவார் என கட்சியினரிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் (வாக்குகள் 5,68,200) 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, இரண்டாம் இடத்தை அடைந்தார்.

நாமக்கல் தொகுதி: நாமக்கல் தொகுதியும் திமுகவுக்கு (கூட்டணி) கடும் போட்டியாகவே இருந்தது. தேர்தல் முடிவுகள் கடைசிவரை இழுபறியாகவே சென்றது. திமுக கூட்டணியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கும், அதிமுகவின் வேட்பாளர் தமிழ்மணிக்கும் கடுமையான போட்டி நிலவியது.

கடைசி கட்டம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாத நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னுக்குப் பின் மாறி மாறி முன்னிலை வகித்திருந்தனர். கடைசி இரண்டு சுற்றுகளில் திமுகவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்து 112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட பல தொகுதியில் எதிர் வேட்பாளர்கள் கடும் போட்டி கொடுத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி... டெபாசிட் இழந்த தொகுதிகள் முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.